அண்மைய செய்திகள்

recent
-

மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரி உயர்தர பரீட்சையில் மாவட்டத்தில் முதலிடம்

கல்வி பொது தர உயர் தர பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரி முதலிடத்தை பெற்றுள்ளது 72.36 சித்திவிகிதத்துடன் முதல் இடத்தை பெற்றுள்ளது என்பதுடன் பொறியியல் பிரிவுக்கு என மன்னார் மாவட்டத்திற்கு 7 மாணவர்களுக்கான வாய்ப்பு காணப்பட்ட நிலையில் நான்கு மாணவர் சித்திவிநாயகர் இந்து கல்லூரியை சேர்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் அதே நேரம் உயர்தர பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் சிவபாலன் யுதர்சன் மூன்று A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியாக பெளதீக விஞ்ஞான பிரிவில் முதல் இடத்தையும் நிலாமதி அன்ரனி சில்வஸ்டர் 3 A சித்திகளை பெற்று கலைபிரிவில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளனர் 

 அத்துடன் நகுலராஜா கதுஷன் 3 A சித்திகளை பெற்று வணிகப்பிரிவில் இரண்டாவது இடத்தையும் இருதயராஜ தியோஜின் குரூஸ் 3 A சித்தியை பெற்று உயிரியல் விஞ்ஞான பிரிவில் மூன்றாமிடத்தினையும் ஜோதிவேல் ஜதுர்சினி 3A சித்திகளை பெற்று கலைப்பிரிவில் மூன்றாம் இடத்தையும் அரசகுமார் கார்திகா 3A சித்தியை பெற்று கலைப்பிரிவில் நான்காம் இடத்தையும் உதயகுமார் ABC சித்திகளை பெற்று பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர் மன்/சித்திவிநாயகர் இந்துகல்லூரியில் கடந்த வருடம் 152 மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய நிலையில் அதில் 110 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடதக்கது












மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரி உயர்தர பரீட்சையில் மாவட்டத்தில் முதலிடம் Reviewed by Author on August 30, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.