அண்மைய செய்திகள்

recent
-

குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய தந்தை…

வெளிநாடு சென்றுள்ள மனைவியை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்க, தனது 5 வயது குழந்தையை கத்தியைக் காட்டி கொலை செய்யப்போவதாக மிரட்டும் வீடியோவை மனைவிக்கு அனுப்பிய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குளியாப்பிட்டிய பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மனைவி வெளிநாடு சென்று மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவரை அழைத்து வருவதற்காக அவர் இந்த செயலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த நபர் குழந்தையை மிரட்டும் வீடியோவை மனைவிக்கும் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பிய நிறுவனத்துக்கும் அனுப்பியுள்ளார். 

குறித்த தந்தையின் செயற்பாடு தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் குளியாப்பிட்டிய பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். குழந்தையின் கழுத்து பகுதியில் சிறு காயங்களுடன் தழும்புகள் இருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர். தந்தையுடன் செல்ல மறுத்துள்ள சிறுவன் தாய் வரும் வரை உறவினருடன் செல்ல விரும்புவதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த தந்தை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன


.
குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய தந்தை… Reviewed by Author on August 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.