அண்மைய செய்திகள்

recent
-

பக்கிங்காம் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள மகாராணியின் பூதவுடல்…

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் எடின்பரோ விமான நிலையத்தில் இருந்து லண்டன் விமான நிலையத்தின் ஊடாக பக்கிங்காம் (Buckingham) அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மகாராணியின் பூதவுடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது ​​70 ஆண்டுகளாக தமது தாய்நாட்டை வழிநடத்திய மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பெருமளவிலான மக்கள் திரண்டிருந்தனர். 

 பூதவுடலைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் உள்ளிட்ட அரச வம்சத்தினர் வருகை தந்திருந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இரண்டாம் எலிசபெத் மகாராணி உடல்நலக்குறைவால் கடந்த 08ஆம் திகதி தனது 96 வயதில் காலமானார். பிரிட்டிஷ் வரலாற்றில் சுமார் 70 ஆண்டு காலம் அரச பதவியில் இருந்தவர் இரண்டாம் எலிசபெத் மகாராணி.

பக்கிங்காம் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள மகாராணியின் பூதவுடல்… Reviewed by Author on September 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.