அண்மைய செய்திகள்

recent
-

நெடுங்கேணியில் இளம் பெண் சுட்டுக்கொலை

வவுனியா வடக்கு – நெடுங்கேணிப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 21 வயதான இளம் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த பெண் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தபோது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டையடுத்து இளம்பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவத்தில் நெடுங்கேணி, சிவா நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜசிங்கம் பிரமிளா என்ற பெண்ணே மரணமடைந்தவராவார். இச்சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நெடுங்கேணியில் இளம் பெண் சுட்டுக்கொலை Reviewed by Author on October 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.