அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா – ஓமந்தை பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரியவகை அரணை இனம் கண்டுபிடிப்பு

வவுனியா ஓமந்தை, அரச வீட்டுத் திட்ட பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை இனம் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. ஓமந்தை அரச வீட்டுத் திட்டப் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு நேற்று  (சனிக்கிழமை) சென்ற ஒருவர் “தாசியா ஹாலியானஸ்” என்ற இலங்கைக்கே உரித்தான அரியவகை அரணை இனம் ஒன்றை அவதானித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

 இதேவேளை 1970 ஆம் ஆண்டுகளில் வெளி வந்த இலங்கையின் இரண்டு ரூபாய் நாணயத்தாளில் இதன் படம் அரசாங்கத்தால் பொறிக்கப்பட்டு இருந்ததுடன், முத்திரை ஒன்றிலும் இதன் படம் பொறிக்கப்பட்டிருந்தது. இதேவேளை கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிக் காலப்பகுதியில் ஓமந்தைக் காட்டுப் பகுதியில் இதே போன்ற அரணை இனம் ஒன்று அவதானிக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


வவுனியா – ஓமந்தை பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரியவகை அரணை இனம் கண்டுபிடிப்பு Reviewed by Author on October 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.