அண்மைய செய்திகள்

recent
-

ரஷ்யர்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி விடுத்த வேண்டுகோள்

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை ரஷ்யர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனிய பகுதிகளில் ரஷ்ய அதிகாரிகளால் நடத்தப்பட்ட வாக்கெடுப்பைத் தொடர்ந்து, சுதந்திரப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த கெர்சன், லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் மற்றும் Zaporizhzhia ஆகிய நான்கு பகுதிகளும் ரஷ்யாவுடன் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மக்கள் விருப்பம் தெரிவித்துள்ள நான்கு நகரங்களையும் ரஷ்யாவுடன் இணைக்கும் கிரெம்ளின் இணைப்பு விழாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கலந்து கொள்வார் என அறிவித்தார். 

 அத்துடன் இந்த விழாவில் ரஷ்யாவுடன் இணையவிருக்கும் பிராந்தியத்தின் மொமாஸ்கோ சார்பு நிர்வாகிகள் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்றும் பெஸ்கோவ் தெரிவித்தார். ரஷ்யாவின் இத்தகைய அத்துமீறிய செயலை கடுமையாகக் கண்டித்துள்ள உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்ய மக்களுக்கு மிகப்பெரிய வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்துள்ளார். அதில் உங்களுடைய உயிரை விட போரை முக்கியமானதாகக் கருதும் ஒருவரை(புட்டினை) ரஷ்யர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்ய அதிகாரிகளால் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் அப்பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் பங்கேற்றனர், இருப்பினும் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு மேற்கத்திய அரசாங்கங்கள் பரவலாக கண்டனம் தெரிவித்தன.

ரஷ்யர்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி விடுத்த வேண்டுகோள் Reviewed by Author on October 01, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.