அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அரச பேருந்து சாரதிகள் பணி புறக்கணிப்பு

மன்னார் அரச பேரூந்து சாரதிகள் இன்றைய தினம் செவ்வாய்கிழமை(29) பணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் நேற்றைய தினம் அரச போக்குவரத்து பேரூந்து சாரதி ஒருவரை தனியார் பேரூந்து சாரதி கூரிய ஆயுதங்களால் தாக்கிய நிலையில் குறித்த சாரதி ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

 இருப்பினும் பொலிஸார் உரிய சட்டநடடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறியும் தாக்குதலை மேற்கொண்ட சாரதிக்கு உடனடியாக பிணைவழங்கியமைக்கு எதிர்பு தெரிவித்து நேற்றையதினம் யாழ்ப்பாணத்திலும் இன்றையதினம் வடமாகாணம் முழுவதுமாக அரச போக்குவரத்து சாரதிகள் பணிபுறக்கனிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் குறித்த சம்பவத்திற்கு காரணமானவர் சட்டத்தில் மூலம் உரிய விதமாக தண்டிக்கக்கோரியும் அரச போக்குவரத்து சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும் இல்லா விட்டால் தொடர்சியாக நாடளாவிய ரீதியில் அரச போக்குவரத்து சாரதிகள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்




மன்னார் அரச பேருந்து சாரதிகள் பணி புறக்கணிப்பு Reviewed by Author on November 29, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.