அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தின நினைவேந்தல் முன்னெடுப்பு.

மாவீரர் தினத்தையொட்டி மன்னாரில் ஆட்காட்டிவெளி மற்றும் பண்டிவிருச்சானில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு மாவீரர் நினைவு தினம் உணர்வு பூர்வமாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை நினைவு கூறப்பட்டுள்ளது. -தமிழர் தாயகத்திற்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருடா வருடம் நினைவு கூறப்பட்டு வருகிறது. அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு .

இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது தமிழ் தேசிய விடுதலைக்காக மூன்று மாவீரர்களை வழங்கிய தாய் நினைவு சுடரை ஏற்றி எழுச்சி பூர்வமாக நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார் . ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளானமக்கள்,அருட்த்கந்தையர்கள்,அருட்சகோதரிகள்,சட்டத்தரணிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மாவீரர் தூயிலும் இல்லங்களில் பொலிஸார் விசேட பதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


















மன்னாரில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தின நினைவேந்தல் முன்னெடுப்பு. Reviewed by Author on November 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.