அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சுத்தமான குடி நீரை நிறைவாக வழங்கும் திட்டத்தை திறந்து வைத்தார் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்.

கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களின் வேண்டு கோளின் பேரில் சுத்தமான குடி நீரை நிறைவாக வழங்கும் திட்டத்தை I.S.R.C தனியார் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மடுக்கரைப் பகுதியில் சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் மக்களின் பாவனைக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (4) காலை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் குறித்த திட்டத்தை வைபவ ரீதியாக கையளித்தார். இந்நிகழ்வில் I.S.R.C நிறுவனத்தின் பணிப்பாளர் மொஹமட் சயாப், I.S.R.C நிறுவனத்தின் ஸ்தாபகரும் முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான ஜனாப் மிஹ்லார் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





மன்னாரில் சுத்தமான குடி நீரை நிறைவாக வழங்கும் திட்டத்தை திறந்து வைத்தார் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான். Reviewed by Author on December 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.