அண்மைய செய்திகள்

recent
-

தனுஷ்கவிற்கு தடை விதிக்குமாறு பரிந்துரை!

இலங்கை கிரிக்கெட் அணியின் தனுஷ்க குணதிலக்கவின் நடத்தை தொடர்பாக விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது, பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க உள்ளாகியுள்ளார். 


 இந்த நிலையில், இவரின் நடத்தை குறித்து விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் அவர், கிரிக்கெட் அல்லது வேறு எந்த விளையாட்டிலும் தொழில்ரீதியாக பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் அவருக்கு தடை விதிக்குமாறும் சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன தலைமையிலான குழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கங்களை ஆராய்ந்த பின்னர் சட்டமா அதிபர், தமது பரிந்துரைகள் அடங்கிய கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனுஷ்கவிற்கு தடை விதிக்குமாறு பரிந்துரை! Reviewed by Author on January 30, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.