அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் பயங்கரம்!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வீட்டில் சடலங்களாக மீட்பு!

வவுனியா, குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்ககையில் உள்ள வீடொன்றில் இருந்து இளம் குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இளம் குடும்பமான தாய், தந்தை, இரண்டு பிள்ளைகள் உள்ளிட்ட நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளும், தாயும் படுக்கையிலும் தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மனைவி பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமை புரிபவராக அறிய முடிகிறது. இரண்டு பிள்ளைகளும் கொலை செய்யப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.

 சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் வயது42, வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி வயது36, இருபிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது9) , கௌ.கேசரா (வயது3) ஆகியோர் உறங்கியபடியும் சடலமாக மீட்கப்பட்டனர். எது எப்படியோ சந்தோஷமாக இருந்த, இந்தக் குடும்பத்தில் பிள்ளைகளைக் கொல்ல எப்படி இந்தப் பெற்றோர்களுக்கு மனசு வந்ததோ….!! இந்த இளம் குடும்பம் மரணிக்கும் அழவிற்கு யாராவது மன அழுத்தம் ஏற்படுத்தி இருந்தால், அவர்களே முதல் குற்றவாளிகள்….!!
                            
                          










வவுனியாவில் பயங்கரம்!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வீட்டில் சடலங்களாக மீட்பு! Reviewed by Author on March 07, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.