அண்மைய செய்திகள்

recent
-

கனடாவில் காணாமல் போயுள்ள இலங்கை தமிழ் இளைஞன்! ஆபத்தான நிலையில் தாய் -


கனடாவில் இலங்கை தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி 40 வயதான ஸ்கந்தராஜ் காணாமல் போயிருந்தார்.

அறிமுகம் இல்லாத நபருடன் கனடாவில் உள்ள Zipperz என விடுதியில் இருந்து சென்றதாக இறுதியாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். அன்று முதல் அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 7 வருடங்களாக அண்ணன் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களின் தாயாரை ஸ்கந்தராஜின் சகோதரர், நவசீலன் நவரட்னம் பாதுகாத்து வருகின்றார்.

தாயாருக்கு தற்போது 80 வயதாகின்றது. அவர் ஒரு இருதய நோயாளி. அவரை காயப்படுத்த நான் விரும்பவில்லை. தனது சகோதரனுக்கு என்ன நடந்ததென யாருக்கும் தெரியாது
கடந்த 2010ஆம் ஆண்டு செப்டெம்பர் 10ஆம் திகதி அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் சென்றுள்ளார் என ஸ்கந்தராஜின் சகோதரன் நவசீலம் நவரட்னம் குறிப்பிட்டுள்ளார்.

அவருடன் சேர்ந்து மேலும் இரண்டு பேர் 2010 மற்றும் 2012ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளளனர். 58 வயதான Majeed Kayhan மற்றும் 42 வயதான Abdulbasir Faizi ஆகியோரே காணாமல் போயுள்ளனர். இவர்களை தேடும் பணியை பொலிஸார் 18 மாதங்கள் தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் டொறொன்டோ நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த கொலை வழக்கு ஒன்றில் இந்த மூவரின் பெயரும் அடிப்படுவதாக நேற்றைய தினம் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஸ்கந்தராஜின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இன்னமும் அவர் தொடர்பில் எந்த ஒரு தகவலும் கிடைக்காமலே உள்ளனர்.

கனேடிய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட நவசீலம் நவரட்னம்,
எனக்கு 3 சகோதரர்கள் உள்ளனர். இருவர் இலங்கையில், காணாமல் போன சகோதரனுக்கு ஒன்றும் நடந்திருக்க கூடாதென எதிர்பார்க்கின்றோம்.. கடவுளை வேண்டுகின்றோம்.
ஸ்கந்தராஜ் 4 பேரில் இரண்டாவதாக பிறந்தவராகும். இந்த வருடம் அவர் தனது 47 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.
காணாமல் போவதற்கு சில வருடங்களுக்கு முன்னரே ஸ்கந்தராஜ் இலங்கையில் இருந்து கனடா சென்றுள்ளார். எங்கள் குடும்பம் தமிழ், சிறுபான்மை இனத்தை சேர்ந்தமையினால் இலங்கை பல இன, அரசியல் பிரச்சினைகளை சந்தித்தோம்.

இதனால் இலங்கையை விட்டு வெளியேற ஸ்கந்தராஜ் தீர்மானித்தார். அவர் அதன் பின்னர் இலங்கைக்கு திரும்பவே இல்லை. நாங்கள் அவரை இலங்கைக்கு அழைத்தோம். எனினும் அவர் விரும்பவில்லை.
நாங்கள் பேஸ்புக் ஊடாக எங்கள் உரையாடலை தொடர்ந்தோம். இவ்வாறு நாட்கள் கடந்துவிட்டது. அவர் திடீரென காணாமல் போய்விட்டார்.
அவரை இன்னமும் தேடி வருகின்றோம். பொலிஸாரும் தொடர்ந்து தேடுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கனடாவில் காணாமல் போயுள்ள இலங்கை தமிழ் இளைஞன்! ஆபத்தான நிலையில் தாய் - Reviewed by Author on February 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.