அண்மைய செய்திகள்

recent
-

ஊடகவியலாளர் சிவராமின் நினைவுதினம் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு.

 ஊடகவியலாளர் சிவராமின் நினைவுதினம் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு.


படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் அவர்களுடைய 19ஆம் ஆண்டு நினைவுதினம் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஏப்ரல் (30) இன்று முல்லைத்தீவு ஊடகவியலாளர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் அவர்களுடைய உருவப்படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலிசெலுத்தப்பட்டது.தர்மரத்தினம் சிவராம் என்ற இயற்பெயர்கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராம், தராகி என்ற புனைபெயரில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள பல பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை எழுதிவந்துள்ளார்.

கடந்த 2005ஆம்ஆண்டு கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .






















ஊடகவியலாளர் சிவராமின் நினைவுதினம் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு. Reviewed by NEWMANNAR on May 01, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.