அண்மைய செய்திகள்

recent
-

நகரை அசுத்தப்படுத்திய 10 பேர் மன்னாரில் கைது.

(22-11-2010)-மன்னார் மாவட்டத்தில் பொது இடங்களில் குப்பை கொட்டி நகரை அசுத்தப்படுத்தியதாக கூறி 10 பேரை மன்னார் பொலிஸார் கைது செய்து இன்று(22௧1) மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி கே.ஜீவரானி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது குறித்த 10 பேருக்கும் தலா 500 ரூபாய் அபராதத்தொகை மன்றில் செலுத்துமாறு நீதவான் இன்று உத்தரவிட்டார்.
மன்னார் மாவட்டத்தில் சுகாதரத்தைப்பேனும் வகையில் பொது இடங்களில் குப்பை போட வேண்டாம் என பொலிஸார் மக்களுக்கு அறிவித்து வந்தனர்.இந்த நிலையிலேயே அறிவித்தல்களையும் மீறி பொது இடங்களில் குப்பை கொட்டிய 10 பேர் மன்னார் பொலிஸாரல் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இதன்போது நீதிபதி மேற்படி அபராதத்தொகையை செலுத்துமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர்
நகரை அசுத்தப்படுத்திய 10 பேர் மன்னாரில் கைது. Reviewed by NEWMANNAR on March 06, 2010 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.