அண்மைய செய்திகள்

recent
-

அரசில் இணைந்து செயற்படுவதா? கூட்டமைப்பு எம்.பிக்கள் நிராகரிப்பு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அரசு பக்கம் தாவப்போகிறார்கள் என்று நேற்று இணையம் ஒன்றில் வெளியான செய்தியை அவர்கள் நிராகரித்துள்ளனர். இந்தச் செய்தி உண்மைக்குப் புறம்பானது, ஆதாரங்கள் ஏதுமற்றது என்று அவர்கள் தெரிவித்தனர். 
 
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தமிழ் பேசும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தற்போது அமைச்சர்களாக இருக்கின்றனர். அரச பிரதிநிதிகளாக இருந்த போதும் இவர்களால் வன்னி மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலையே காணப்படுகிறது என் றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், யோகேஸ்வரன் ஆகியோர் சுட்டிக்காட்டி உள்ளனர். 
 
அரசு பக்கம் இவர்கள் வந்தால் வன்னி மாவட்ட அபிவிருத்திக்குப் பெருந்தொகை நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என்று அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததாக தமிழ் சி. என்.என். செய்தி வெளியிட்டிருந்தது. தாங்கள் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலேயே இருந்து தமிழ் மக்களுக்குச் சேவையாற்றுவோம் என்றும் அவர்கள் கூறினர்.          
அரசில் இணைந்து செயற்படுவதா? கூட்டமைப்பு எம்.பிக்கள் நிராகரிப்பு Reviewed by NEWMANNAR on June 11, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.