எங்கே செல்கிறது எமது இளைஞர் சமுதாயம்????
அன்புக்குரிய தமிழ் இளைஞர்களுக்கு வணக்கம்! 30 ஆண்டுகள் போர் நடந்த பூமியிது. போர் என்பதன் அடுத்த பக்கம் விடுதலைப் போராட்டம் என்பதாக இருக்கும்.
அந்தப் போராட்டத்தின் முடிவு, உயிரிழப்பு, சொத்தழிவு, வேதனை, சோதனை என்பதாக முடிந்து போனது என்றே நினைத்துக் கொண்டோம்.
ஆனால் போரின் முடிவு தமிழ் இனத்தின் ஆணிவேரை உக்க வைத்து கிளை, இலை, பூ, காய் கனி என எல்லாவற்றையும் உதிர வைத்து விடப்போகின்றது என்பதை இப்போது உணரும் போது, இதை எழுதும் காகிதாதிகளும் நனைந்து கொள்கின்றன.
எங்களை நாங்கள் அறிய முன்னதாக விடுதலைப் போராட்டத்தை நடத்தி முடித்து விட்டோமா? அல்லது விடுதலைப் போராட்ட காலத்தில் எங்கள் இளம் சமூகத்தின் மீதான கட்டுப்பாடுகள் ஓர் அடக்குமுறையின் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டு விட்டனவா? அல்லது எங்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பின் மத்தியில் வாழ்வுக்கான விருப்பை முழுமையாக இழந்து விட்டோமா? எதுவுமே புரியவில்லை.
மேலும் படிக்க
எங்கே செல்கிறது எமது இளைஞர் சமுதாயம்????
Reviewed by Admin
on
November 14, 2011
Rating:
No comments:
Post a Comment