அண்மைய செய்திகள்

recent
-

'மன்னாரை பிறப்பிடாமாக கொண்டவர்கள் வெளிமாவட்டங்களில் அகதிகள் என அழைக்கப்படுவதை விரும்பவில்லை'

'மன்னாரை சொந்த மாவட்டமாக கொண்ட எந்த சமூகமும் வெளிமாவட்டங்களில் அகதிகள் எனும் நாமத்துடன் தொடர்ந்தும் அழைக்கப்படுவதை விரும்பவில்லை. ஆதனால் பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்றம் தொடர்பான தரவுகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தில் ஒவ்வொருவரும் இதய சுத்தியுடனும் எமது மாவட்டம் என்ற பற்றுடனும் உண்மையான தகவல்களை வழங்கி ஒத்துழைக்க வேண்டும்' என மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.


மன்னார் மாவட்டத்தில் 18.04.2012 ஆரம்பிக்கப்பட்டுள்ள மீள் குடியேற்ற தரவுகள் சேகரிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் தகவல் தரக்கூடிய ஒரு நபரை குறித்த திகதிகளில் குறித்த இடங்களுக்கு வருகை தந்து ஒத்துழைப்பு வழங்குமாறு மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த தினங்களில் சமூகமளித்து ஒத்துழைப்பு வழங்காதவர்கள் மன்னாரில் மீளக்குடியேற விரும்பாதவர்களின் பட்டியலில் இணைக்கப்படுவார்கள் என்பதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
'மன்னாரை பிறப்பிடாமாக கொண்டவர்கள் வெளிமாவட்டங்களில் அகதிகள் என அழைக்கப்படுவதை விரும்பவில்லை' Reviewed by Admin on April 20, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.