முசலி பிரதேசத்தில் பொது நூலகம் அமைத்து தருமாறுமக்கள் வேண்டுகோள்
.jpg)
முசலி பிரதேச சபை செயலாளர் அவர்களே!
முசலி பிரதேச சபை உறுப்பினர்கேள!
முசலி கல்விமான்கேள!
முசலி பிரதேச மததலைவர்ககேள!
வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் ஊடாக யுத்ததினால் இடம்பெயர்ந்த மக்களினை அரசாங்கம் முசலி; பிரதேச மக்களை மீள்குடியேற்றி வன்னி மாவட்ட அமைச்சர்களின் ஊடாக ;அவர்கஞக்கு தேவையான வாழ்வாதார உதவிகளையும் அபிவிருத்தி நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது.இருந்தும் பொது நூலகம் இன்மையினால் மாணவர்கள் பல வருடகாலமாக கவலையுடன் உள்ளனர்.
மன்னார் -முசலி பிரதேசத்தில் தற்போது 3450 குடும்பங்கள் மிள்குடியேறி உள்ளனர் இது வரைக்கும் அரசாங்காத்தால் அனுமதி பெற்ற (உயர்தர) பாடசாலைகள் 2 இருக்கின்றன. அரிப்பு தமிழ் கலவன் பாடசாலை மற்றும் முசலி முஸ்லிம் பாடசாலை (சாதாரன தர) அனுமதி பெற்றவை 3 பாடசாலைகள் உள்ளன அப்பாடசாலை மாணவர்கள் சனி மற்றும் ஞாயற்று கிழமை தமது வாசிப்பு தேவையினை புர்த்தி செய்து கொள்வதற்கும் பொது அறிவினை வளர்த்து கொள்வதற்கும் பல மையில் அப்பால் அயல் பிரதேசத்திற்கும். கிரமாங்கஞக்கு செல்ல வேண்டிய தூர்ப்பாக்கிய நிலைக்கு ஆலாகுகின்றனர்.
யுத்ததிற்கு முன்பு சிலாவத்துறை மற்றும் பெற்கேணி பகுதியில் பொது நூலகம் இருந்தன அதனை மீண்டும் புணர்நிர்மானம் செய்தால் முசலி மக்களின் வாசிப்பு தாகத்தினை தீர்க்க முடியும். அதே போன்று முசலி பிரதேச சபைக்கு சொந்தமான நூலகம் அரிப்பு பகுதியில் உள்ளதனால் குறிப்பிட்ட நபர்கள் மாத்திரம் பாவிப்பாதாக பிரதேச மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே மாணவர்களினதும் முசலி மக்களினதும் அறிவு தாகத்தினை தீர்த்து வைப்பி;ர்களா? இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறு மக்கள் வேண்டிக்கொள்கின்றனர்.
எஸ்.எச்.எம்.வாஜித்
2013-03-20
முசலி பிரதேசத்தில் பொது நூலகம் அமைத்து தருமாறுமக்கள் வேண்டுகோள்
Reviewed by Admin
on
March 20, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment