அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் கூட்டமைப்பு அலுவலகம் மீது கல் வீச்சு; 13பேர் காயம் காணொளி

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தில் கட்சி உறுப்பினர்களுக்காக கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை அங்கு தீடீரென வந்த கும்பல் ஒன்று சரமாரியாக கற்களை வீசி குழப்பத்தை உண்டுபண்ணியுள்ளது. இந்த சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த கட்சி உறுப்பினர்கள் ஆதரவளர்கள் என 13 பேர் காயமடைந்துள்ளனர். உடமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.

கூட்டத்தைக் குழப்புவதற்கென 50க்கும் மேற்பட்டவர்கள் வாகனத்தில் கொண்டுவரப்பட்டு கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலக்தின் முன் இறக்கப்பட்டநிலையில் அவர்கள் இந்த மிலேச்சத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குழப்பம் விளைவித்த அனைவரும் மதுபோதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கவென நின்றிருந்த பொலிஸார் முன்னிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆர்பாட்டம் நடத்துவது போல வந்திறங்கிய இவர்கள் கூட்டமைப்புக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு கட்சி அலுவலகத்திக்குள் புகுந்து கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்துக்குவந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்டட ஒருவரை பொதுமக்கள் பிடிக்கப்பட்ட பொலிஸாரிடம் ஒப்படைத்த போதும் அவர்கள் குறித்த நபரைக் கைதுசெய்யவில்லலை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


கிளிநொச்சியில் கூட்டமைப்பு அலுவலகம் மீது கல் வீச்சு; 13பேர் காயம் காணொளி Reviewed by NEWMANNAR on March 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.