காணிப் பிரச்சினை எதிர்காலத்தில் பாரிய விளைவுக்கு வழிவகுக்கும் : சபையில் சம்பந்தன் எச்சரிக்கை
வடக்கிலே நிலவியுள்ள காணிப்பிரச்சினையானது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளுக்கு வழி வகுக்கும் என்பதால் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் அங்கு நிலவும் நீதியற்றதும் நியாயமற்றதுமான நிலைமைக்கு தீர்வு காணுமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின் போது வடக்கு - கிழக்கில் எழுந்துள்ள காணி விவகாரம் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரேரணையை சமர்ப்பித்த அவர் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக உரை நிகழ்த்தியதுடன் வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் காணி சுவீகரிப்பு இராணுவ மற்றும் சிங்களக்குடியேற்றம் உள்ளிட்ட விடயங்களை புள்ளிவிபரங்களுடனும் முன்வைத்தார்.
காணிப் பிரச்சினை எதிர்காலத்தில் பாரிய விளைவுக்கு வழிவகுக்கும் : சபையில் சம்பந்தன் எச்சரிக்கை
Reviewed by Admin
on
August 09, 2013
Rating:

No comments:
Post a Comment