அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஆலய நிர்வாக சபை செயலாளரை செல்வம் எம்.பி நேரில் சென்று பார்வை.-படங்கள்

மன்னார் பள்ளிமுனை புனித லூசியா ஆலய நிர்வாக சபையின் செயலாளரான லக்ஸ்மன் பிகிராடோ (வயது- 29)என்பவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அரச தரப்பு அரசியல் வாதி ஒருவரினால் கடுமையாக தாக்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது மன்னார் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று திங்கட்கிழமை மதியம் மன்னார் பொது வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிடுவதை படார்வையிட்டார்.

இவர் தாக்கப்பட்ட நிலையில் இது வரை குறித்த அரச தரப்பு அரசியல் வாதி மீது பொலிஸார் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லலை என பாதிக்கப்பட்டவர் சார்பாக அக்கிராம பிரதிநிதிகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் முறையிட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.



மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஆலய நிர்வாக சபை செயலாளரை செல்வம் எம்.பி நேரில் சென்று பார்வை.-படங்கள் Reviewed by Admin on September 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.