அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு எதிர்க்கட்சியினர் நேற்று பதவியேற்பு

வடக்கு மாகாணசபையின் எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் நேற்று மதியம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். 

 வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. எஞ்சிய 8 ஆசனங்களில் ஏழு ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஒரு ஆசனத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கைப்பற்றியிருந்தன. 

 வடமாகாண சபையின் கன்னியமர்வு எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நேற்று ஐனாதிபதி முன்பாகப் பதவியேற்றுள்ளனர். 

 கந்தசாமி கமலேந்திரன், ஏ.ராமநாதன், டி. செனவிரட்ன, ஏ. ஜயதிலக்க, அப்துல் ரிஸ்கான், பி.தவநாதன், ஏ.ஜவாஹில் மற்றும் எம்.ரியாஸ் ஆகியோரே இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

வடக்கு எதிர்க்கட்சியினர் நேற்று பதவியேற்பு Reviewed by Admin on October 18, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.