வவுனியாவில் சுயதொழில் முயற்சிக்காக காளான் வளர்ப்பு பயிற்சி
வவுனியா விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களினால் வவுனியா மாவட்ட சர்வோதையா நிலையத்தில் இன்று காளான் வளர்ப்பு பயிற்சி இடம்பெற்றது.
சர்வோதய சிரமதான சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் மற்றும் தேசோதய சபை அங்கத்தவர்களுக்கும் சுயதொழில் ஊக்குவிப்பை ஏற்படுத்திக் காளான் வளர்ப்பை கிராமமட்டத்தில் அதிகரிப்பதற்காக இப்பயிற்சி நெறி ஒழுங்கு செய்யப்பட்டதாக சர்வோதய நிலையத்தில் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எஸ்.உதயகுமாரன் தெரிவித்தார்.
இப்பயிற்சி நெறியினை விவசாயத்திணைக்கள பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.யாமினி, விவசாய போதனாசிரியர் கே.பிரிந்தா ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு காளான் வளர்ப்பு முறை தொடர்பான செய்முறை விளக்கங்களை வழங்கினர்.
வவுனியாவில் சுயதொழில் முயற்சிக்காக காளான் வளர்ப்பு பயிற்சி
Reviewed by Admin
on
October 17, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment