லஞ்சம் பெற்றுக் கொண்டதாக 60 அதிபர்கள் மீது குற்றச்சாட்டு
அறுபது பாடசாலை அதிபர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தரம் ஒன்றுக்கான பாடசாலை மாணவர்களை இணைத்துக் கொள்ளும் போது இவ்வாறு லஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதிபர்கள் பல்வேறு வழிகளில் லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் 25 நாட்களில் மட்டும் இவ்வாறு லஞ்சம்பெற்றுக் கொள்ளப்பட்டமை பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
லஞ்சம் பெற்றுக் கொண்டதாக 60 அதிபர்கள் மீது குற்றச்சாட்டு
Reviewed by NEWMANNAR
on
January 26, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 26, 2014
Rating:


No comments:
Post a Comment