அண்மைய செய்திகள்

recent
-

நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட மலசலகூடம் மற்றும் குளியலறை கட்டிடத்தொகுதிகள் கையளிப்பு. [படங்கள் இணைப்பு]

மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிட வளாகத்தினுள் நவீனவசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட பொது மலசலகூடம் மற்றும் குளியலறை கட்டிடத்தொகுதிகள் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மன்னார் மாவட்ட திட்ட முகாமையாளர் உதைய சீலன் நேற்று முந்தினம் வைபவ ரீதியாக மன்னார் நகர சபையின் தலைவர் எஸ் . ஞானப்பிரகாசத்திடம் கையளித்தார் .
  
 ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபையினால் மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிட வளாகத்தில் 53 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி கட்டிடத்தொகுதி மன்னார் நகரசபைத் தலைவர் எஸ் . ஞானகப்பிரகாசத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன .

இதன் போது மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் , நகர சபை உறுப்பினர்கலான இரட்னசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர் .

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மேற்படி கட்டிடத்தொகுதிகளுக்கான நிர்மாணப் பணிகள் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தன .

விசேட தேவையுடையோர்களும் பயன்படுத்தும் வகையில் மேற்படி பொது மலசலகூட மற்றும் குளியலறை கட்டிடத்தொகுதிகளில் வசதிகள் செய்யப்பட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது .




நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட மலசலகூடம் மற்றும் குளியலறை கட்டிடத்தொகுதிகள் கையளிப்பு. [படங்கள் இணைப்பு] Reviewed by Admin on January 12, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.