அண்மைய செய்திகள்

recent
-

எம்மை கைது செய்யட்டும் ,நாம் சிறையிலாவது ஆறுதலாக இருப்போம், யாழ். மறை மாவட்ட ஆயர்.

எம்மை கைது செய்யட்டும் , கைது செய்தால் நாம் சிறையில் ஆறுதலாக இருப்போம் ' என யாழ் . மறை மாவட்ட
ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை நேற்று தெரிவித்தார் .

அமெரிக்க , பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலிற்கும் யாழ் . மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று  காலை 9 மணிக்கு நடைபெற்றது .

இந்தச் சந்திப்பினைத் தொடர்து யாழ் ஆயர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார் . இதன்போது ' தென்பகுதி அமைப்புக்கள் பல யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆயர்களைச் கைது செய்யுமாறு வலியுறுத்துகிறார்களே இது தொடர்பான உங்கள் கருத்து என்ன என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலே ஆயர் இதனைத் தெரிவித்தார் .

மேலும் ' வடபகுதி ஆயர்களை ஜனாதிபதி சந்திப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகின , இந்நிலையில் உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என ஊடகவியலாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பினர் .

அதற்குப் பதிலளித்த ஆயர் , ' ஜனாதிபதியை சந்திப்பதற்கான அழைப்பு இதுவரையில் எங்களுக்கு விடுக்கப்படவில்லை . அவ்வாறு ஜனாதிபதி அழைத்து போகாவிட்டால் எங்களைத் தூக்கி கொண்டு போய்விடுவார்கள் என்று சிரித்தவாறு யாழ் . மாவட்ட ஆயர் பதிலளித்தார் .

எம்மை கைது செய்யட்டும் ,நாம் சிறையிலாவது ஆறுதலாக இருப்போம், யாழ். மறை மாவட்ட ஆயர். Reviewed by NEWMANNAR on February 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.