அவுஸ்திரேலியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும்; அவுஸ்திரேலியா
மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. சிட்னி மோர்னிங் ஹெரல்ட் நாளிதழுக்கு அளித்த செவ்வியிலேயே, அவுஸ்திரேலியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜுலி பிஷோப், இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று அவசியம் இல்லை.
யுத்த சூழ்நிலையின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டமை மற்றும் யுத்த சூனிய வலயத்தில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டமை போன்றவிடயங்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமை இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியதுடன், எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் தொடர்பில் உள்நாட்டு விசாரணையொன்று மேற்கொள்ளப்படவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும்; அவுஸ்திரேலியா
Reviewed by Author
on
February 06, 2014
Rating:
Reviewed by Author
on
February 06, 2014
Rating:

No comments:
Post a Comment