அண்மைய செய்திகள்

recent
-

மகளை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய தந்தைக்கு 20 வருட சிறை

தனது மகளை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய தந்தைக்கு 20 வருட சிறைத் தண்டனையும் ஐந்து இலட்சம் ரூபா நஷ்ட ஈடும், 5000 ருபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

அனுராதபுரம் விசேட நீதிமன்றில் தனது இளம் வயது மகளை பாலியல் வல்லுறபுரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட முறைப்பாட்டை விசாரணை செய்த நீதிபதி கேமா சுவர்ணாதிபதி மேற்படி தீர்ப்பை வழங்கினார்.

சிறுமிக்கு ஐந்து இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கும் படியும் அவ்வாறு வழங்காத பட்சத்தில் மேலும் இரண்டு வருட சிறைத் தண்டனையை வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் விதிக்கப்பட்ட ஐயாயிரம் ரூபா அபராதத்தை செலுத்தாத பட்சத்தில் மேலுமொரு வருட சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டு மெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மகளை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய தந்தைக்கு 20 வருட சிறை Reviewed by NEWMANNAR on March 05, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.