அண்மைய செய்திகள்

recent
-

அவ­தா­னம்! வாகனங்களை வாடகைக்கு பெற்று போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த பெண் உட்பட 6 பேர் கைது

வாக­னங்­களை வாட­கைக்குப் பெற்று அந்த வாக­னங்­க­ளுக்கு அசலை ஒத்த போலி ஆவ­ணங்­களை தயா­ரித்து பத்­தி­ரி­கை­களில் விளம்­ப­ரப்­ப­டுத்தி குறைந்த விலையில் விற்­பனை செய்து வந்த பெண் ஒரு­வரை தலை­வி­யாகக் கொண்ட 6 பேர் கொண்ட கும்பல் ஒன்­றினை கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

மோசடி தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிரி­யங்க டி சில்வா தலை­மை­யி­லான விசேட பொலிஸ் குழு மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யி­னூ­டாக இவர்­களை கைது செய்ய முடிந்­த­தா­கவும் மோச­டிக்கு பயன்­ப­டுத்­திய ஆவ­ணங்கள், விசே­ட­மாக தயா­ரிக்­கப்­பட்ட இறப்பர் முத்­தி­ரைகள் உள்­ளிட்­ட­வற்­றையும் மீட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் அஜித் ரோஹண தெரிவித்­துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்­த­த­வாது,

வாகனம் ஒன்­றினை கொள்­வ­னவு செய்­யும்­போது மிக அவ­தா­ன­மாக இருக்க வேண்டும். ஏனெனில் வாட­கைக்குப் பெற்­றுக்­கொள்­ளப்­படும் வாக­னங்கள் போலி ஆவ­ணங்­க­ளுடன் விற்­பனை செய்­யப்­படும் மோசடி தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. வாக­னங்­களை வாட­கைக்கு விடும் நிறு­வ­னத்­திற்கு கடந்த காலங்­களில் சென்­றுள்ள பெண் ஒருவர் இரண்டு நாட்­க­ளுக்கு வாக­ன­மொன்­றினை பெற்று பயன்­ப­டுத்­தி­யுள்ளார். 

அதற்­கு­ரிய வாடகை தொகை­யி­னையும் அவர் வழங்­கி­யுள்ளார். அத­னை­ய­டுத்து சில நாட்­களின் பின்னர் பிறி­தொரு நபர் ஒரு­வ­ருடன் குறித்த நிறுவ­னத்­திற்கு சென்­றுள்ள அந்தப் பெண், தன்­னுடன் வந்த ஆட­வ­ருக்கு வாக­ன­மொன்­றினை மூன்று மாதங்­க­ளுக்கு வாட­கைக்கு கொடுக்­கு­மாறு பரிந்­துரை செய்­துள்ளார்.

 301 வகை­யி­லான வாக­னங்­க­ளையே இந்த குழு இலக்கு வைத்­துள்­ளது. இத­னை­ய­டுத்து குறித்த வாக­னத்­திற்கு போலி ஆவ­ணங்­களை தயா­ரித்­துள்ள அந்த குழு அதனை சந்தை விலை­யிலும் குறைத்து 14 இலட்­சத்து 25 ஆயிரம் ரூபா­விற்கு விற்­பனை செய்­துள்­ளது. இத­னை­ய­டுத்து இந்த விடயம் தொடர்பில் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு சந்­தேக நபர்­களை கைது செய்­தனர் என்றார்.

இது தொடர்பில் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிரி­யந்த டி சில்வா தெரிவிக்­கையில்,
நுகே­கொட பகு­தியில் உள்ள வாக­னங்­களை வாட­கைக்கு விடும் நிறு­வனம் ஒன்­றி­லேயே இந்த பெண் உள்­ளிட்ட குழு ஒன்று தனது கை வரி­சையை காட்­டி­யுள்­ளது. 

வாக­னங்­க­ளுக்­கான போலி ஆவ­ணங்­களை தயா­ரிக்க மோட்டார் வாகன பதிவு திணைக்­க­ளத்தின் அசல் விண்­ணப்­பங்­களை திருட்­டுத்­த­ன­மாக எடுத்தே இவை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த விண்­ணப்­பங்­கைள அங்கு சேவை செய்யும் சாரதி ஒருவர் விண்­ணப்பம் ஒன்­றுக்­காக 5 ஆயிரம் ரூபாவை பெற்­றுக்­கொண்டு வழங்­கி­யுள்ளார். நாகுல கமகே கரு­ணா­சேன என்ற குறித்த சார­தி­யையும் நாம் கைது செய்­துள்ளோம். இவர் மோட்­டார்­வா­கன பதிவு திணைக்­க­ளத்தின் முன்னாள் கணக்­கா­ளரின் சார­தி­யாக பணி­யாற்­றி­யுள்ளார். இதனை விட ஹட்டன் பிர­தே­சத்தில் வைத்து கைது செய்­யப்­பட்ட இந்த குழுவின் தலை­வி­யையும் நாம் தீவிர விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யுள்ளோம். 

அவர் தமிழ், முஸ்லிம், சிங்­கள பெயர்­களில் தன்னை அடை­ய­ாளப்­ப­டுத்­திக்­கொண்டு இந்த மோச­டியில் ஈடு­பட்­டுள்ளார். ஸ்ரீதேவி, நஜ்லா அகிலா, ரிஹானா ஆகிய பெயர்­க­ளி­லேயே 33 வய­தான அவர் தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்ளார். கோட்டை பிர­தே­சத்தில் உள்ள முக­வரி ஒன்றை அவர் வழங்­கி­யுள்­ள­போதும் அது போலி­யா­னது. மூன்று கண­வன்­மாரும் இவ­ருக்கு உள்­ளமை விசா­ர­ணை­களில் தெரிய­வந்­துள்­ளது என குறிப்­பிட்டார்.

நேற்று நடை­பெற்ற குறித்த செய்­தி­யாளர் சந்­திப்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் அஜித் ரோஹண மேலும் கருத்து தெரிவிக்­கையில்,
கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபர்கள் அறு­வரும் கொழும்பு நீதிவான் நீதி மன்றில் ஆஜர் படுத்­தப்­பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வாகனம் ஒன்றினை கொள்வனவு செய்ய முனையும் ஒருவர் மிக அவதானமாக இருக்க வேண்டும். இதுவரை அவ்வாறான போலி நடவடிக்கை ஒன்றுக்குள் எவரேனும் சிக்குண்டு இருப்பின் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவின் தொலைபேசி இலக்கமான 011 - 2583512 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறையிட முடியும் என்றார்.
அவ­தா­னம்! வாகனங்களை வாடகைக்கு பெற்று போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த பெண் உட்பட 6 பேர் கைது Reviewed by NEWMANNAR on March 03, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.