தைவானில் விமான விபத்து: 51 பேர் பலி!
தைவானில் பயணிகள் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிரான்ஸ் ஆசியா என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று 54 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, பெங்கு கவுன்டி என்ற பகுதியின் மேக்காங் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கும்போது விபத்துக்குள்ளானதாக தைவான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் 51 பேர் பலியானதாகவும், 7 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 17ஆம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 298 பேருடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், உக்ரைனில் கிழக்கு பகுதியில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்த போது எடுத்த படம்
விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்த போது எடுத்த படம்
தைவானில் விமான விபத்து: 51 பேர் பலி!
Reviewed by NEWMANNAR
on
July 23, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment