தாதிய உத்தியோகத்தர் சடலமாக மீட்பு: மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமீன்மடு கிராம வீடொன்றிலிருந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றும் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பாலமீன்மடு முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த தியாகராஜா தருண்ராஜ் (வயது 32) என்ற தாதிய உத்தியோகத்தரே இன்று புதன்கிழமை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் தனது படுக்கையறையில் சடலமாக கிடந்ததாக உறவிகள் பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார், சடலத்தை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
உயிரிழந்தவரின் குடும்பத்தில் மேலும் மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர்களாக பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.
தாதிய உத்தியோகத்தர் சடலமாக மீட்பு: மட்டக்களப்பில் சம்பவம்
Reviewed by NEWMANNAR
on
August 20, 2014
Rating:

No comments:
Post a Comment