இராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கை இந்தியாவிற்கு இடையில் கடல் வழிப் பாதை
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புதிய கடல் வழிப் பாதையொன்றை அமைப்பது தொடர்பில் இந்தியா கவனம் செலுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்பரப்பில் மேற்கொள்ளப்படவிருந்த சேது சமுத்திரத் திட்டம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளமையே இதற்கு காரணமாகும்.
இதற்கமைய இராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய கடல் வழிப் பாதையை அமைப்பதற்கு இந்தியா உத்தேசித்துள்ளது.
இந்த திட்டம் தொடர்பான பத்திரம் விரைவில் இந்தியாவின் மத்திய அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளமை குறிபிடத்தக்கதாகும்.
இராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கை இந்தியாவிற்கு இடையில் கடல் வழிப் பாதை
Reviewed by NEWMANNAR
on
October 15, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 15, 2014
Rating:


No comments:
Post a Comment