அபிவிருத்திக்குழுக்கூட்ட மோதல் சம்பந்தமாக கூட்டமைப்பு உறுப்பினர்களை பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு
கடந்த 16.12.2014 செவ்வாய்கிழமையன்று இடம்பெற்ற யாழ்.மாவட்ட அபிவிருத்துக்குழுக்கூட்டத்தின் போது தமிழ்த்தேசியக்கூடமைப்பினருக்கும். ஈ.பி.டி.பி யினருக்கும் இடையில் கருத்துமோதல்களாக ஆரம்பித்து அது இறுதியில் அடிதடியாக முடிவடைந்திருந்தது. இதில் ஈ.பி.டி.பி யினரால் தமிழ்த்தேசியக்கூடமைப்பினர் தாக்கப்பட்டதுடன் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் காயமடைந்திருந்தார்.
ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரே தம்மைத்தாக்கியதாக ஈ.பி.டி.பியினர் பொலிஸில் புகார்களை செய்ததுடன் மருத்துவமனையிலும் படுத்துக்கொண்டுஇ உடனே வெளியேறியும் விட்டனர். இந்நிலையில் ஈ.பி.டி.பி உறுப்பினர்களைத்தாக்கியதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம் பா.கஜதீபன் மற்றும் காரைநகர் பிரதேசசபைத்தலைவர் வே.ஆனைமுகன் ஆகியோரை நாளை 24.12.2014 புதன்கிழமை காலை 9 மணியளவில் யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்புக்கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்…
வீட்டுக்கு வந்த பொலிசார் தனிச்சிங்களத்தில் எழுதப்பட்ட காகிதத்தை வழங்கியதுடன் அது சம்பந்தமாக கேட்டபோது தமிழில் நாளை விசாரணைக்கு வருமாறு கூறினர். அக்காகிதத்தில் தனிச்சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளதுடன் உத்தியோகபூர்வ இறப்பர் முத்திரைகள் எதுவும் இடப்படவில்லை. இது சம்பந்தமாக அழைக்கப்பட்டவர்கள் எமது வடமாகாண அவைத்தலைவர் மற்றும் எமது முதல்வருடன் கலந்துரையாடி அடுத்த முடிவுகளை எடுப்போம் எனவும் குறிப்பிட்டார்.
ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரே தம்மைத்தாக்கியதாக ஈ.பி.டி.பியினர் பொலிஸில் புகார்களை செய்ததுடன் மருத்துவமனையிலும் படுத்துக்கொண்டுஇ உடனே வெளியேறியும் விட்டனர். இந்நிலையில் ஈ.பி.டி.பி உறுப்பினர்களைத்தாக்கியதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம் பா.கஜதீபன் மற்றும் காரைநகர் பிரதேசசபைத்தலைவர் வே.ஆனைமுகன் ஆகியோரை நாளை 24.12.2014 புதன்கிழமை காலை 9 மணியளவில் யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்புக்கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்…
வீட்டுக்கு வந்த பொலிசார் தனிச்சிங்களத்தில் எழுதப்பட்ட காகிதத்தை வழங்கியதுடன் அது சம்பந்தமாக கேட்டபோது தமிழில் நாளை விசாரணைக்கு வருமாறு கூறினர். அக்காகிதத்தில் தனிச்சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளதுடன் உத்தியோகபூர்வ இறப்பர் முத்திரைகள் எதுவும் இடப்படவில்லை. இது சம்பந்தமாக அழைக்கப்பட்டவர்கள் எமது வடமாகாண அவைத்தலைவர் மற்றும் எமது முதல்வருடன் கலந்துரையாடி அடுத்த முடிவுகளை எடுப்போம் எனவும் குறிப்பிட்டார்.
அபிவிருத்திக்குழுக்கூட்ட மோதல் சம்பந்தமாக கூட்டமைப்பு உறுப்பினர்களை பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு
Reviewed by NEWMANNAR
on
December 24, 2014
Rating:

No comments:
Post a Comment