அண்மைய செய்திகள்

recent
-

பாதிக்கப்பட்ட இளம் தாய்மார்களுக்கான சுய வேலை வாய்ப்பு-Photos

எக்ளொப் லங்கா கேரண்டி லிமிடட் ( E C L O F ) என்னும் ஸ்தாபனம் கடந்த 25 வருடங்களாக கொழும்பில் இயங்கி வருகின்றது. 2;ம் மகா யுத்தத்தின் பின் போரினால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மத ஸ்தலங்களை மீள கட்டியெழுப்புவதற்காக ஓர் பொது நிதி ஒன்றை அகில உலக கிறிஸ்தவர்கள் மத்தியிலிருந்து சேகரித்து இந்நிதியம் ஆரம்பிக்கப்பட்டது.

பல ஆலயங்களையும் உலகம் பூராகவும் புனரமைத்த பின் மீதியாக இருந்த நிதியை மக்களின் அபிவிருத்திக்காக எக்ளொப் ஸ்தாபனம் பல நாடுகளுக்கு வழங்கி இருந்தது. இலங்கைக்கு கிடைக்கப் பெற்ற நிதியை இதுவரை தென்பகுதியைச் சேர்ந்த 4,000 க்கு மேற்பட்ட மக்கள் இலகு கடன் அடிப்படையில் பெற்று தமது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொண்டனர்.

2013 வைகாசி மாதத்திலிருந்து தமிழ் பிரதேச மக்களுக்கும் குறிப்பாக மன்னார் மாவட்டத்துக்கும் இவ் உதவி கிடைக்கப் பெற்றது. முதலில் நானாட்டான் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 344 இளம் தாய்மார்கள் இவ் இலகு கடன் திட்டத்தின் கீழ் பயன் பெற்றதை தொடர்ந்து மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்கும், மாந்தை பிரதேச செயலாளர் பிரிவிற்கும் இவ் உதவி திட்டம் விஸ்தரிக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் மாதர் அபிவிருத்திச் சங்கங்கள் மூலமாக 90மூ மான கடன் உதவியும், சிறு குழுக்கள் மூலமாக 10மூ கடன் உதவியும் வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மன்னார் அரசாங் அதிபர், அப்பகுதி பிரதேச செயலாளர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் பெரிதும் உதவி புரிந்து வருகின்றனர்.

குறிப்பாக நானாட்டான் உதவி பிரதேச செயலாளர் பிரிவில் அச்சங்குளம், ஆவணம், தோமஸ்புரி, மாவிலங்கேணி, சூரியக்கட்டைக்காடு, செம்மண்தீவு, முருங்கன்பிட்டி, கொவ்வங்குளம், நானாட்டன் வடக்கு, வங்காலை மேற்கு, இலந்தைகுளம், பரிகாரிகண்டல், மோட்டைகடை, நறுவலிக்குளம் போன்ற கிராம மாதர் சங்க உறுப்பினர்களும், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நடுக்குடா, துள்ளுக்குடியிருப்பு, வெற்றிநாயகி கிராமம் போன்ற மாதர்களும் பயனடைந்துள்ளனர்.

இச்சங்க உறுப்பினர்களில் பலர் தமது ஐPவனோபயத்திற்காக கிடுகு பின்னி விற்றல், பனம் விதைகள் சேகரித்து கிழங்கு போட்டு விற்றல், முருங்கைக்காய் சேகரித்து கொழும்பிற்கு அனுப்புதல், குளங்கலிலும் கடலிலும் மீன் பிடித்தல், இறால், நண்டு, கணவாய் போன்றவற்றை சேகரித்து  கொழும்பிற்கு அனுப்புதல், கருவாடு பதனிடலும் ஏற்றுமதி செய்தலும், உப உணவு பயிர் செய்கை, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு பசு மாடு வளர்ப்பு போன்றவகைகளிலும்,
ஆடை தைத்தல், மதிய போசனம் வழங்கல், சிற்றூண்டி வியாபாரம், உணவு பொருட்கள் பக்கற்றில் அடைத்து விற்றல், சிறுகடை வியாபாரம், மேசன் வேலை, தச்சு வேலை, நடமாடும் மரக்கறி, மீன் வியாபாரம், வீட்டில் ரியுஷன் நடாத்துதல் போன்ற பல வேலை வாய்ப்புக்களில் ஈடுபட்டு மாதாந்தம் 10,000 தொடக்கம் 25,000 வரை சம்பாதித்துள்ளனர்.

மேலும் எக்ளொப் ஸ்தாபனம் வலுவூட்டல் பயிற்சிகளை அடிக்கடி நடாத்துவதுடன் இவர்களிக் முன்னேற்றம் சம்பந்தமான ஆய்வுகளை வெளிக்கள உத்தியோகத்தர்கள் மூலமாக நடாத்தி வருகின்றது.
மன்னாரில் மேற்கொண்ட மேற்படி உதவி திட்டமானது பாதிக்கப்பட்ட பல தாய்மார்களுக்கு நன்மை அளித்த படியினால் மாந்தை மேற்கு, மடு, முசலி போன்ற பிரதேசங்னளில் விரிவு படுத்தப்படுததுடன் எதிர் வரும் காலங்களில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும்; எக்ளொப் ஸ்தாபனம் தனது சேவையை விஸ்தரிக்க ஆலோசித்துள்ளதாக எக்ளொப் லங்கா மன்னார் கிளை ஆலோசகர் திரு.சின்கிளேயர் பீற்றர் தெரிவித்தார்.



























பாதிக்கப்பட்ட இளம் தாய்மார்களுக்கான சுய வேலை வாய்ப்பு-Photos Reviewed by NEWMANNAR on December 24, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.