1485ஆம் ஆண்டு கொல்லப்பட்ட மன்னர்: 530 ஆண்டுகளுக்கு பின்னர் 26ஆம் திகதி அடக்கம்-Photos
1485ஆம் ஆண்டு போரில் கொல்லப்பட்ட இங்கிலாந்து மன்னர் உடல் 530 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்வரும் 26 ஆம் திகதி அடக்கம் செய்யப்படவுள்ளது.
இங்கிலாந்தில் 1480ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த மன்னர் 3ஆவது ரிச்சர்ட்ஸ். இவர் 1485ஆம் ஆண்டில் நடந்த போரில் கொல்லப்பட்டார்.
இங்கிலாந்தின் இறுதி மன்னரான இவரது உடல் எங்கே அடக்கம் செய்யப்பட்டது என தெரியாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டில் லிசெஸ்டர் என்ற இடத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் அருகே கார் தரிப்பிடத்தில் இவரது உடல் புதைக்கப்பட்டது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து புதைப்பொருள் நிபுணர்கள் அங்கு தோண்டி பார்த்த போது அங்கு மன்னர் 3ஆம் ரிச்சர்டின் எலும்பு கூடு இருந்தது. பின்னர் அது மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அவரது உடலை மீண்டும் ராஜமரியாதையுடன் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி 530 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அதற்காக நேற்று ‘ஓக்’ மரத்தினால் தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் அவரது எலும்புக்கூடு வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அது இன்று முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை சவப்பெட்டி வண்டியில் ஊர்வலமாக எடுத்துக் செல்லப்படுகிறது.
எதிர்வரும் 26ஆம் திகதி லீ செஸ்டரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் அரசு முறைப்படி உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
1485ஆம் ஆண்டு கொல்லப்பட்ட மன்னர்: 530 ஆண்டுகளுக்கு பின்னர் 26ஆம் திகதி அடக்கம்-Photos
Reviewed by NEWMANNAR
on
March 23, 2015
Rating:

No comments:
Post a Comment