யாழ்.பல்கலைக்கழக முறைகேடுகளை விசாரணை செய்யுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம்
யாழ்.பல்கலைகழக நிர்வாகத்தில் இடம்பெற்ற சகலவிதமான முறைகேடுகள் பற்றியும் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பல்கலைகழக பேரவையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு இருந்தது. யாழ்.பல்கலைக்கழக வாயிலில் இன்று மதியம் 12 மதியம் இடம்பெற்ற இந்த போராட்டத்தினை யாழ்.பல்கலைகழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்து இருந்தன. அதன் போது முறைகேடுகளை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் விசாரணைகள் மிக துரிதமாக நடாத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. விசாரணைகள் தாமதப்படுத்தப்பட்டால் அடுத்து வரும் நாட்களில் யாழ்.பல்கலைகழக ஆசிரியர் சங்கம் மற்றும் மாணவர்களையும் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
யாழ்.பல்கலைக்கழக முறைகேடுகளை விசாரணை செய்யுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம்
Reviewed by Author
on
June 19, 2015
Rating:

No comments:
Post a Comment