அண்மைய செய்திகள்

recent
-

கட்டுநாயக்கவில் உணவு விஷமானதால் 144 பேர் வைத்தியசாலையில் அனுமதி


உணவு விசமடைந்ததன் காரணமாக கட்டுநாயக்க பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் 144 ஊழியர்கள் திடீர் சுகவீனமுற்றுள்ளனர்.

திடீர் சுகவீனமுற்றவர்களில் 61 பேர் ​தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காலை உணவு உட்கொண்டதன் பின்னர் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் சுகவீனமுற்றுள்ளனர்.

சுகவீனமுற்ற 144 பேரும் இராகம, மினுவங்கொட மற்றும் சீதுவ ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதித்ததன் பின்னர் சிலர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.
கட்டுநாயக்கவில் உணவு விஷமானதால் 144 பேர் வைத்தியசாலையில் அனுமதி Reviewed by NEWMANNAR on June 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.