அண்மைய செய்திகள்

recent
-

சிங்களவருக்கும் சர்வதேசத்திற்கும் நாம் எடுத்துக் காட்டிய தமிழர் ஒற்றுமை இத்தேர்தலிலும் தொடர வேண்டும்...


இறுதி யுத்த அவ­லங்­களைத் தொடர்ந்து தமிழ் மக்கள் பெள­தீக ரீதி­யாகப் பல­வீனப் படுத்தப் பட்டு இருந்த நேரத்தில் தமிழ் மக்­க­ளுக்கு தேவைப்­பட்ட தலை­மைத்­து­வத்­தையும், வழி­காட்­ட­லையும் உரிய நேரத்தில் கொடுக்கத் தகு­தி­யற்று, தங்கள் சுய­லா­பங்­களில் மட்டும் கவனம் செலுத்­தி­ய­வர்கள், தேர்­தலில் தமிழ் மக்கள் தமக்கு வாக்­க­ளிக்க வேண்டும் என்று எப்­படி எதிர்­பார்க்க முடியும் என்று கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் எம். ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

தனது காரி­யா­ல­யத்தில் நேற்று முன்தினம் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களை சந்­தித்து உரை­யா­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கேள்வி எழுப்­பினார்.

அவர்­க­ளுடன் தொடந்து அவர் உரை­யா­டு­கையில், தமிழர் உரிமைப் போராட்­டத்தின் ஒவ்­வொரு கால­கட்­டங்­களும் அக்­கா­ல­கட்­டங்­க­ளுக்கு தேவை­யான பொருத்­த­மான நகர்­வு­க­ளையும், போராட்ட வடி­வங்­க­ளையும் வேண்டி நின்­றன.

அந்­த­வ­கையில் இவ்­வ­ருட ஆரம்­பத்தில் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்தல், ராஜ­பக்­ச­வி­ட­மி­ருந்து தேசத்தை மீட்கும் கடப்­பாட்டை தமிழ் மக்­களின் கைகளில் ஒப்­ப­டைத்­தது. ராஜ­பக்­சவை நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும் பாது­காக்க முயற்­சித்து, படு­தோல்வி அடைந்த முக­வர்கள், இப்­பொ­ழுது தமிழ் மக்­களின் வாக்­கு­களை கேட்டு நிற்­பது ஆச்­ச­ரி­ய­மா­னது.டக்லஸ் தேவா­னந்தா மகிந்­த­விற்கு வாக்குப் போடுங்கள் என்று சொல்லி ராஜ­பக்­ஷவை நேர­டி­யாக காப்­பாற்ற முனைந்தார்,

கஜேந்­தி­ர­கு­மாரோ, வாக்­க­ளிப்பை புறக்­க­ணிக்­கும்­படி மக்­களை கேட்டு மறை­மு­க­மாக ராஜ­பக்­சவின் இருப்பை காப்­பாற்ற முயன்றார். இவர்­களின் வேண்­டு­கோள்­க­ளையும், பிரச்­சா­ரங்­க­ளையும் முற்­றாக நிரா­க­ரித்த தமி­ழர்கள், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வழி­காட்­ட­லையும் தலை­மை­யையும் முழு­மை­யாக ஏற்று பெரு­ம­ளவில் வாக்­க­ளித்­தனர், வெற்­றியும் பெற்­றனர். தமிழர் ஒற்­று­மையின் பலத்தால் பெற்­றெ­டுக்­கப்­பட்ட வெற்றி, அடுத்த படியை நோக்கி, அடுத்த இலக்­கினை நோக்கி உறு­தி­யாக செல்ல வேண்­டி­யுள்­ளது.

தமி­ழர்கள் தமது ஒற்­று­மையின் பலத்­தினால் ராஜ­பக்­ச­வி­ட­மி­ருந்து தேசத்தை மீட்ட பொழுது, தமி­ழர்­களின் ஒற்­று­மையின் பலத்தை சிங்­க­ள­வர்­களும், சர்­வ­தே­சமும் கண்­டு­கொண்­டனர்.

அந்த ஒற்­றுமை இந்தத் தேர்­த­லிலும் தொடர வேண்டும், அந்த ஒற்­றுமை இந்தத் தேர்­தலில் உறு­தி­யாக வெளிப்­ப­டுத்­தப்­படல் வேண்டும், அப்­பொ­ழுது தமி­ழர்­களின் ஒற்­று­மையின் பலத்தைக் கொண்டு, சர்­வ­தேச ஆத­ர­வுடன் தமி­ழர்­களின் சுயாட்சி குறித்த முன்­னெ­டுப்­புக்­களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உரிய முறையில் முன்­னெ­டுக்கும் என்று உறு­தி­யாகக் கூறிக்­கொள்­கின்றேன் என்று தெரி­வித்தார்
சிங்களவருக்கும் சர்வதேசத்திற்கும் நாம் எடுத்துக் காட்டிய தமிழர் ஒற்றுமை இத்தேர்தலிலும் தொடர வேண்டும்... Reviewed by Author on July 31, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.