அண்மைய செய்திகள்

recent
-

புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு முதல் நூறு நாளில் தேர்தல் முறைமை மாற்றப்படும்: ஜனாதிபதி


புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு முதல் நூறு நாளில் தேர்தல் முறைமை மாற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக தேர்தல் முறைமையை மாற்றியமைக்க முயற்சித்தேன். எனினும் சில இனவாத கட்சிகள் தேர்தல் முறைமை மாற்றத்தை தடுத்து நிறுத்தி விட்டன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி நான் அப்போதைய அரசாங்கத்திலிருந்து விலகி வெளியேறினேன்.

37 ஆண்டுகளாக போராடிய நோக்கமொன்றை வெற்றி கொள்ளும் நோக்கில் அவ்வாறு வெளியேறினேன்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் இந்த தேர்தல் முறைமைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே முதலில் எதிர்ப்பை வெளியிட்டது.

சிறிமாவோ பண்டாரநாயக்க இந்த தேர்தல் முறைமைக்கு எதிராக நாடாளுமன்றில் குரல் கொடுத்திருந்தார்.

1999ம் ஆண்டில்தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை பொருத்தமற்றது என ஐக்கிய தேசியக் கட்சி புரிந்து கொண்டது.

எனினும் சுதந்திரக் கட்சி 78ம் ஆண்டு முதல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்ய போராடி வருகின்றது.

20 ஆண்டு ஆட்சி செய்த சுதந்திரக் கட்சிக்கு புதிய பரிணாமம் ஒன்றை வழங்காவிட்டால் மீளவும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பது சிரமமாகிவிடும்.

ஊழல் மோசடிகாரர்களை பாதுகாக்காது அவர்களுக்கு வேட்பு மனு வழங்காது கட்சியை பாதுகாக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர மாணவர் முன்னணி என்ற அமைப்பினை மீளமைப்பு செய்யும் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு முதல் நூறு நாளில் தேர்தல் முறைமை மாற்றப்படும்: ஜனாதிபதி Reviewed by Author on July 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.