அண்மைய செய்திகள்

recent
-

வேட்பாளருக்கான ஒழுக்கக்கோவை வர்த்தமானியில் வெளியிடப்படும்


எதிர்­வரும் பொதுத்தேர்­தலின் போது கட்சி பிர­சார நட­வ­டிக்­கைகள் மற்றும் தேர்தல் சட்­ட­திட்­டங்கள் அமுலாக்கம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கும் அரசியல் கட்சிகளுக்குமிடையில் நேற்று முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.

வேட்­பா­ளர்­க­ளுக்­கான ஒழுக்கக் கோவை­யினை வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிப்­ப­தற்கு தேர்­தல்கள் செய­லகம் நட­வ­டிக்கை எடுக்­கு­மென்று இந்த சந்திப்பின்போது கட்சி பிர­தா­னி­க­ளிடம் தேர்தல்கள் ஆணையாளர் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

பொதுத் தேர்­தலை முன்­னிட்டு கடந்த வாரம் கட்சிப் பிர­தா­னி­களை தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய சந்­தித்­தி­ருந்த நிலையில் இரண்­டா­வது தட­வை­யாகவே நேற்றைய சந்திப்பு இடம்பெற்றது.

நேற்று காலை 10 மணி­ய­ளவில் இடம்பெற்ற சந்­திப்பின் போது பிர­தான கட்­சிகள் அனைத்­தி­னதும் பிர­தா­னி­களும் ஏனைய கட்­சிகள் மற்றும் சுயேட்சை குழுக்­களின் பிர­தி­நி­திகளும் கலந்துகொண்­டி­ருந்­தனர்.

இதில் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களின் போது தேர்தல் சட்­டங்­களின் அடிப்­ப­டையில் செயற்­ப­டு­தல், தேர்தல் சட்­டங்­களை மீறும் செயற்­பா­டு­களின் போதும் மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

குறிப்­பாக இந்தக் கலந்துரையாடலின் போது தேர்தல் பிர­சாரம் தொடர்­பி­லேயே முக்­கிய கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. இதன்­போதும் பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் தொடர்பில் பொலி­ஸாரின் செயற்­பா­டு­க­ளுக்கும் முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கையின் போது ஒரு கட்­சியின் சார்பில் 25 பேர் அளவில் வீடு­க­ளுக்கு சென்று தமது கட்சி பிர­சா­ரங்­களை மேற்­கொள்ள முடியும் என்ற தீர்­மானமும் எடுக்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு ஒவ்­வொரு வேட்­பா­ளரும் தமது கட்சி காரி­யா­லயம் தவிர்ந்து தாம் போட்­டி­யிடும் மாவட்­டத்தில் தனிப்­பட்ட காரி­யா­லயம் ஒன்றை அமைத்­துக்­கொள்ள முடியும்.

அத்­தோடு அர­சாங்க உடை­மைகள் மற்றும் அரச ஊழி­யர்­களை தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­து­வதை உட­ன­டி­யாக தடுக்கும் கோரிக்­கையும் நேற்று விடுக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல் பிர­சாரக் கூட்­டங்­களின் போது தடைசெய்­யப்­பட வேண்­டிய விட­யங்கள், அனு­ம­திக்­கப்­பட்ட இடங்­களில் மாத்­திரம் பிர­சார அலு­வ­ல­கங்­களை அமைத்தல் மற்றும் சுவ­ரொட்­டி­களை ஒட்­டுதல் உள்­ளிட்ட பல முக்­கி­ய­மான அம்­சங்கள் தொடர்பில் கட்சி பிரதானிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இச் சந்திப்பினைத் தொடர்ந்து வேட்பாளர்களுக்கான ஒழுக்கக் கோவையினை வர்த்த மானியில் பிரசுரிப்பதற்கும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதற்கும் தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுக்குமென்றும் தெரியவருகிறது.


வேட்பாளருக்கான ஒழுக்கக்கோவை வர்த்தமானியில் வெளியிடப்படும் Reviewed by NEWMANNAR on July 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.