ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற சயனைடு,தொலை தொடர்பு சாதனங்கள் பறிமுதல்: இலங்கையர் உட்பட 3 பேர் கைது
ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த இருந்த சயனைடு மற்றும் தொலை தொடர்புசாதனங்களை பறிமுதல் செய்து விடிய விடிய விசாரணை நடைபெற்று வருகிறது.
இலங்கைக்கு வெடிபொருள்கள் ராமேஸ்வரம் வழியாக கடத்த இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ராமநாதபுரம் கடலோரப்பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர் இந் நிலையில் நேற்று இரவு உச்சிப்புளி அருகே வாகன சோதணையில் ஈடுபட்டு வந்த மாவட்ட காவல்துறையினர் காரை நிறுத்தி சோதனை செய்தனர் அப்போது காரில் யாழ்பாணத்தை சேர்ந்த கிரிஷ்ணக்குமார் ((39) உச்சிப்புளி அருகே உள்ள சுந்தரமடையான் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்,மற்றும் நகாச்சி கிராமத்தை சேர்ந்த ஜெய்குமார் (27) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் காரில் சோதணை நடத்திய போது மறைத்து வைத்திருந்த 300 கிராம் சயனைடு (மிக அதிக சக்தி வாய்ந்த கொடிய விஷத்தண்மை கொன்ட துகள்) 75 சயனைடு குப்பிகள், 4 திசைகாட்டும் கருவிகள்,8 செல்போன்கள் இந்தியப்பணம் ரூ 50 ஆயிரம் மற்றும் இலங்கை பணம் 19 ஆயிரம் இவைகளை கைப்பற்றிய போலீஸார் காரையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் இலங்கை நபர் தமிழீழ விடுதலை புலி இயக்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவர் எனத்தகவல் வெளியாகியுள்ளது மேலும் மற்ற இருவரும் ஏற்கனவே விடுதலைப்புலிகளின் தொடர்பில் உள்ள நபர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளதால் போலீஸார் மேலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்
ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற சயனைடு,தொலை தொடர்பு சாதனங்கள் பறிமுதல்: இலங்கையர் உட்பட 3 பேர் கைது
Reviewed by NEWMANNAR
on
July 22, 2015
Rating:

No comments:
Post a Comment