எமது கடல் வளத்தை பாதுகாக்கத் தவறின் கடல் மட்டம் உயரும் அபாயம்- அமைச்சர் பா.டெனீஸ்வரன்
எமது கடல்வளத்தையும சமுத்திரத்தையும் சிறந்த முறையில் பாதுகாக்க தவறினால் 2100 ஆம் ஆண்டு 6 அடி 6 அங்குலம் அளவு கடல் மட்டம் உயர்வடை யும் அபாயம் உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் அமெரிக்க விஜயம் தொடர் பான பயன்கள் குறித்து வடக்கு மாகாண மீன் பிடி அமைச்சின் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக் கையில்,
கடல் வளத்தை பாதுகாப்பது, அபிவிருத்தி செய்வது தொடர்பாக அமெரிக்க அரசாங்கத் தினால் 16 நாடுகளிலும் இருந்து தலா ஒருவர் வீதம் அழைக்கப்பட்டு மூன்று வாரகால கருத் தரங்கு நடைபெற்றது.
கடல் வளத்தை பாதுகாப்பதில் ஒரு நாடு மட் டும் முயற்சி செய்தால் போதாது. அனைத்து நாடுகளும் இணைந்து முயற்சி செய்ய வேண் டும் என்பதுதான் இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமாக இருந்தது.
கடல் வளப் பாதுகாப்பது மட்டுமல்லாது மீன்பிடித்துறையினை எவ்வாறு விருத்தி செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் அத்துடன் அமெரிக்க அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக் கைகள் எவ்வாறு இருக்கின்றன என்பது தொடர் பாகவும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் அமெரிக்காவில் மத்திய மாகாண அரசுக்கிடையில் நல்லதொரு உறவு காணப்படுகின்றது.
அங்குள்ள 50 மாகாணங்களிலும் கடல் எல்லையில் இருந்து 3 மைல் தூரம் வரை அந்தந்த மாகாணங்களுக்கு இடம் மத்திய அரசினால் ஒதுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தமக்குரிய எல்லைக்குள் மீன் பிடி கடல் வளத்தை பாதுகாத்தல், வரிகளை பெற்றுக் கொள்ளுதல் போன்ற செயற்பாடு களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
எனவே அங்கு மத்திய, மாகாண அரசுக்கி டையே சுமுகமான சிறந்ததொரு உறவு இரு ந்து வருகின்றது.
அவ்வாறு செயற்பட்டதன் காரணமாக அவர்கள் அபிவிருத்தியில் உச்ச நிலையை அடைந்துள்ளார்கள்.
இவ்வாறான நடைமுறைகளை எமது நாட் டில் பின்பற்றினால் எமது இனப்பிரச்சினை க்கும் சுமுகமான தீர்வு விரைவில் கிடைப்பதோடு எமது மாகாணத்தில் அபிவிருத்தியையும் மேற்கொள்ள முடியும்.
அதன் அடிப்படையில் மத்திய அரசிடம் எமது மாகாணத்திற்கென கடல் எல்லையில் இருந்து 3 கடல்மைல் தூரம் ஒதுக்கப்பட வேண்டும் என கோரவுள்ளேன்.
அதன் ஊடாக சட்டங்களை இயற்றி பல் வேறு திட்டங்களை செயற்படுத்தவும் எமது மீன்பிடித்துறையில் பல்வேறு முன்னேற்றங் களை கொண்டுவரவும் முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சரின் அமெரிக்க விஜயம் தொடர் பான பயன்கள் குறித்து வடக்கு மாகாண மீன் பிடி அமைச்சின் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக் கையில்,
கடல் வளத்தை பாதுகாப்பது, அபிவிருத்தி செய்வது தொடர்பாக அமெரிக்க அரசாங்கத் தினால் 16 நாடுகளிலும் இருந்து தலா ஒருவர் வீதம் அழைக்கப்பட்டு மூன்று வாரகால கருத் தரங்கு நடைபெற்றது.
கடல் வளத்தை பாதுகாப்பதில் ஒரு நாடு மட் டும் முயற்சி செய்தால் போதாது. அனைத்து நாடுகளும் இணைந்து முயற்சி செய்ய வேண் டும் என்பதுதான் இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமாக இருந்தது.
கடல் வளப் பாதுகாப்பது மட்டுமல்லாது மீன்பிடித்துறையினை எவ்வாறு விருத்தி செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் அத்துடன் அமெரிக்க அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக் கைகள் எவ்வாறு இருக்கின்றன என்பது தொடர் பாகவும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் அமெரிக்காவில் மத்திய மாகாண அரசுக்கிடையில் நல்லதொரு உறவு காணப்படுகின்றது.
அங்குள்ள 50 மாகாணங்களிலும் கடல் எல்லையில் இருந்து 3 மைல் தூரம் வரை அந்தந்த மாகாணங்களுக்கு இடம் மத்திய அரசினால் ஒதுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தமக்குரிய எல்லைக்குள் மீன் பிடி கடல் வளத்தை பாதுகாத்தல், வரிகளை பெற்றுக் கொள்ளுதல் போன்ற செயற்பாடு களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
எனவே அங்கு மத்திய, மாகாண அரசுக்கி டையே சுமுகமான சிறந்ததொரு உறவு இரு ந்து வருகின்றது.
அவ்வாறு செயற்பட்டதன் காரணமாக அவர்கள் அபிவிருத்தியில் உச்ச நிலையை அடைந்துள்ளார்கள்.

அதன் அடிப்படையில் மத்திய அரசிடம் எமது மாகாணத்திற்கென கடல் எல்லையில் இருந்து 3 கடல்மைல் தூரம் ஒதுக்கப்பட வேண்டும் என கோரவுள்ளேன்.
அதன் ஊடாக சட்டங்களை இயற்றி பல் வேறு திட்டங்களை செயற்படுத்தவும் எமது மீன்பிடித்துறையில் பல்வேறு முன்னேற்றங் களை கொண்டுவரவும் முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
எமது கடல் வளத்தை பாதுகாக்கத் தவறின் கடல் மட்டம் உயரும் அபாயம்- அமைச்சர் பா.டெனீஸ்வரன்
Reviewed by NEWMANNAR
on
July 17, 2015
Rating:

No comments:
Post a Comment