அண்மைய செய்திகள்

recent
-

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் மெத்தியூஸ் - மலிங்க...


பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்­டியில் விளை­யா­டு­வதற்கு இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தலை­வ­ரான அஞ்­சலோ மெத்­தியூஸ் மற்றும் இரு­ப­துக்கு 20 ஓவர் போட்டி அணித் தலைவர் லசித் மலிங்­கவும் ஒப்­பந்­த­மா­கி­யுள்­ளதாக பாகிஸ்தான் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

இந்­திய கிரிக்கெட் சபை­யினால் நடத்­தப்­படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து எல்லா நாட்டு கிரிக்கெட் சபை­களும் 20 ஓவர் லீக் தொடரை நடத்த முன்­வந்­துள்­ளன. அதிக அளவு வரு­மானம் ஈட்­டப்­ப­டு­வதால் இதற்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­ப­டு­கி­றது.

இந்­தியாஇ மேற்­கிந்­தியத் தீவுகள், அவுஸ்­தி­ரே­லிய கிரிக் கெட் சபை­க­ளை­ய­டுத்து பாகிஸ்­தானும் இதில் குதித்­துள்­ளது.

பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்­டிகள் அடுத்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் 4ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடத்­தப்­ப­டு­கி­றது.

இந்த தொடரில் லசித் மலிங்க, அஞ்­சலோ மெத்­தி­யூஸைத் தொடர்ந்து இலங்கை அணியின் அஜன்த மெண் டிஸ், திசர பெரேரா மற்றும் மேற்­கிந்­தியத் தீவு­களின் சுனில் நரேன், டிவைன் சுமித், சாமுவேல் ஆகி­யோரும் விளை­யா­டு­வ­தற்கு விருப்பம் தெரி­வித்துள்­ள­தாக தெரி­கி­றது.

கட்­டாரில் உள்ள தோகாவில் அடுத்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் 4ஆம் திகதி முதல் 24 வரை பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டி நடை­பெற இருக்­கி­றது. இதற்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைசெய்து வரு­கி­றது.

பாகிஸ்தான் சுப்பர் லீக்கை பிர­ப­லப்­ப­டுத்த பாகிஸ் தான் அணியின் முன்னாள் தலைவர் மற்றும் கிரிக்கெட் வர்­ண­னை­யா­ளர்­க­ளாக செயற்
படும் வசிம் அக்ரம் மற்றும் ரமீஸ் ராஜா ஆகியோரை விளம்பரத் தூதர்களாக நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபைவிரும்புவதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் மெத்தியூஸ் - மலிங்க... Reviewed by Author on September 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.