அண்மைய செய்திகள்

recent
-

ஃபிபா தலைவர் செப் பிளேட்டர் திடீர் நீக்கம்: சர்வதேச கால்பந்து சம்மேளனம் அதிரடி உத்தரவு...



ஊழல் புகார்களில் சிக்கி பெரும் சர்ச்சியை ஏற்படுத்தி வந்த ஃபிபாவின் தலைவர் உள்ளிட்ட 3 அதிகாரிகளை தற்காலிகமாக பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸில் உள்ள சூரிச் நகரில் நேற்று முதல் ஃபிபா அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்துள்ளது.

இந்த கூட்டத்தின் முடிவில், ஃபிபாவின் தலைவரான செப் பிளேட்டரை தற்காலிகமாக பதவியிலிருந்து நீக்க சர்வதேச கால்பந்து சம்மேளன உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

பெரும்பான்மையான உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஃபிபாவின் தலைவர் அதிரடியாக நீக்கப்பட்டதாக ஏற்கனவே ஆதாரம் இல்லாத தகவல்கள் வெளியாகின.

இதனை பல உறுப்பினர்கள் மறுத்த வந்த நிலையில், சற்று முன்னர் அதிகாரப்பூர்வமாக வெளியான செய்தியில், ஃபிபா தலைவர் செப் பிளேட்டர், பொதுச்செயலாளர் ஜெரோம் வால்கே மற்றும் துணைத்தலைவர் மைக்கேல் பிளாட்டனி ஆகியவர்களை 90 நாட்களுக்கு தற்காலிகமாக அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிபாவில் செயல்படும் நெறிமுறைகள் குழு(ethics committee) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், ஃபிபாவின் முன்னாள் துணைத்தலைவரான Chung Mong-joon என்பவருக்கு ஃபிபா விவகாரங்களில் பங்கேற்க 6 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சம் பிராங்குகள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது இந்த 3 முக்கிய அதிகாரிகளின் மீதும் ஊழல் புகார்கள் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெறிமுறைகள் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வந்த ஃபிபா ஊழல் குற்றச்சாட்டில் தற்போது முக்கிய நடவடிக்கை எடுத்திருப்பது கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஃபிபாவின் விளம்பரதாரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


ஃபிபா தலைவர் செப் பிளேட்டர் திடீர் நீக்கம்: சர்வதேச கால்பந்து சம்மேளனம் அதிரடி உத்தரவு... Reviewed by Author on October 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.