குப்பி விளக்கில் படித்து சாதித்த வவுனியா வடக்கு மாணவன்...

குப்பி விளக்கில் படித்து வவுனியா வடக்கு, புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவன் சிறிதரன் நிகேதன் 183 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் 5 ஆம் நிலையைப் பெற்று சாதித்துள்ளார்.
வவுனியாவில் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றாகிய கற்குளம், சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் வசித்து வந்த நிகேதன் வீட்டில் இருந்து 5 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்திலேயே கல்வி கற்றான்.
சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நிகேதன் போக்குவரத்து வசதிகளற்ற ஒழுங்கைகள் ஊடாக 2 கிலோமீற்றர் நடந்து சென்று, பின்னர் பேரூந்தில் 3 கிலோமீற்றர் தினமும் பயணித்தே படித்து வந்தான்.
இது தவிர, அவனது வீட்டிற்கு மின்சார வசதி கூட இன்னும் வழங்கப்படவில்லை. குப்பி விளக்கிலேயே தினமும் படித்து வந்தான்.
இவ்வாறான கஸ்ரங்களுக்கு மத்தியில் ரீயூசன் செல்லாது பாடசாலைப் படிப்பை மட்டுமே நம்பி படித்து தற்போது வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சையில் 183 புள்ளிகளைப் பெற்று வவுனியா மாவட்டத்தில் 5 ஆவது இடத்தைப் பெற்று அனைவரதும் கனத்தை ஈர்த்துள்ளான்.
இதேவேளை, தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன், ஊடகவியலாளர்கள் சிலர் குறித்த மாணவனின் வீட்டிற்குச் சென்று அவனை ஊக்கப்படுத்தியதுடன் சிறு பரிசுப் பொருட்களையும் வழங்கினர்.
மாணவனின் போக்குவரத்துப் பிரச்சனையை கருத்தில் கொண்டு வடமாகாண சுகாதார அமைச்சரால் குறித்த மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி ஒன்றும் வழங்கப்படவுள்ளது.
குப்பி விளக்கில் படித்து சாதித்த வவுனியா வடக்கு மாணவன்...
Reviewed by Author
on
October 08, 2015
Rating:

No comments:
Post a Comment