அண்மைய செய்திகள்

recent
-

பிரபாகரன் பாதுகாத்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை எமது ஆட்களே அழித்து விட்டார்கள்: ரியாஸ் சாலி...


பிரபாகரன் பாதுகாத்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை, படையினரின் உதவியுடன் எமது ஆட்களே அழித்து விட்டதாக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் வேலை முகாமையாளர் ரியாஸ் சாலி விசனம் வெளியிட்டுள்ளார்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் இயந்திரங்கள் உள்ளிட்ட 1000 மில்லியன் ரூபா சொத்துக்களை அழிப்பதற்கு அனுமதித்ததற்கு இலங்கை இராணுவமே பொறுப்பேற்க வேண்டும்.

பிரபாகரன் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை, பாதுகாத்த அதேவேளை, எமது எமது ஆட்களே, ஜனாதிபதி மாளிகையை கட்டும் எண்ணத்துடன் அதனை அழித்து விட்டனர்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் நிலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த ஏப்ரல் மாதமே தெரியப்படுத்தியிருந்தேன். இதுவரை அவரிடம் இருந்து பதில் வரவில்லை.

கடந்த ஏழு மாதங்களாக அவருக்கு பல உயர்மட்ட உள்நாட்டு, வெளிநாட்டுக் கடமைகள் இருந்திருக்கலாம்.

எவ்வாறாயினும், இந்த விவகாரம் தொடர்பாக இராணுவத்திடம் இருந்து அவர் அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளார் என்பது தெரியும்.


பிரபாகரன் பாதுகாத்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை எமது ஆட்களே அழித்து விட்டார்கள்: ரியாஸ் சாலி... Reviewed by Author on November 17, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.