மன்னாரின் கல்விக்குரல் அமைப்பினரால் 200 மாணவர்களுக்கான பெறுமதியான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கிய நிகழ்வு-24-01-2016
மன்னாரில் இன்று மன்னாரின் கல்விக்குரல் அமைப்பின் தலைவர் எஸ்-என்-டிலான் அவர்களின் தலமையில் மன்னார்க்கல்விக்குரலின் அமைப்பினரால் தெரிவுசெய்யப்பட்ட 200 மாணவர்களுக்கான பெறுமதியான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வானது இன்று 24-01-2016 காலை 10-30 மணியளவில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
ஆழைக்கப்பட்ட விருந்தினர்களை வரவேற்றதுடன் வரவேற்பு நடனத்தை பூண்டிமாதா முன்பள்ளி மாணவிகள் வழங்க தமிழ்த்தாய் வாழ்த்தினை கஜேந்தினி சுந்தரலிங்கம் இசைக்க வரவேற்புரையினை கவிஞரும் ஊடகவியலாளரும் அமைப்பின் நிர்வாக உறுப்பினருமான வை-கஜேந்திரன் வழங்க ஆசியுரையினை மன்னார் மாவட்ட புனித செபஸ்தியார் பேராலயத்தின் பங்குத்தந்தை பெப்பி சோசை வழங்கினார் அத்தோடு தலமையுரையினை மன்னார் கல்விக்குரலின் தலைவரும்சூரியன் பண்பலையின் தமிழ் நிகழ்ச்சி முகாமையாளரும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய S-N-டிலான் வழங்கினார்.
பரதநாட்டியத்தை அபிநயா வழங்க
இவ்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக......
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்களும்
புனித செபஸ்தியார் பேராலயத்தின் பங்குத்தந்தை பெப்பி சோசை அவர்களும் மன்-பத்திமா மத்திய மகாவித்தியாலயத்தின் அதிபர் அருட்சகோதரர் ஸ்ரணிஸ்லஸ் அவர்கள்
மன்-சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியின் அதிபர் ரி.தனேஸ்வரன் அவர்கள் மன்-புனித வளனார் பாடசாலையின் அதிபர் ராதா லெம்பட் அவர்கள்
மடு சுகாதார வைத்திய அதிகாரி ஒஸ்மன் டெனி அவர்களும் மன்னார் கல்விக்குரல் அமைப்பின் ஆலோசகர் யூட்.கா லே பிகிராடோ அவர்கள் சித்த மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி லோகநாதன் அவர்களும்
துரையம்மா அன்பகத்தின் தலைவர் V.உதயன் செயலாளர் P.றொபினா ஆசிரியர் அவர்கள் மன்னார் விளையாட்டு கழகங்களான ஸ்ரார் ஈகிள் தலைவர் அமல் மற்றும் கிறீன் பீல்ட் தலைவர் ஜெயக்குமார் மன்னாரின் கல்விக்குரல் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோருடன் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்....
மேலும் அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்கள் தெரிவுசெய்யப்பட்ட 200 மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கியதோடு விருந்தினர்களின் சிறப்புரையின் சாரம்சமாக......
மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விடையத்தினை மன்னாரின் கல்விக்குரலின் அமைப்பின் தலைவரான S-N-டிலான் அவருடன் இணைந்து செயலாற்ரும் அமைப்பின் உறுப்பினர்களும் செயல்திறன் மிக்கவர்களாக செயற்படுகின்றார்கள்.
இச்சேவையானது பாராட்டுக்குரியதும் முன்னிலையில் வைத்து நோக்க வேண்டியதுமாகும் இவ்மாவட்டத்தில் இருக்கின்ற எத்தனை தனவந்தர்கள் இப்படியான செயற்பாட்டுக்கு உதவுகின்றார்கள் இச்சேவை தொடரவேண்டும் இவர்களின் பணி மென்மேலும் மன்னார் மாவட்ட மாணவர்களுக்கான தேவையாகும் அனைவருக்கும் கல்வி ஒவ்வொருவரினதும் வாழ்வின் எதிர்காலம் சிறப்பானதாக அமைய அவனது கல்வியானது தரமான முறையில் கிடைக்க வேண்டும். தடையின்றி இவ்வாறான உதவிகள் எமது மாணவர்களுக்கு கிடைக்குமானால் எமது மாவட்டம் சிறந்த மாணவர்களை கொண்ட வளமான மாவட்டமாகும் என்பதில் ஐயமில்லை…
மன்னாரின் கல்விக்குரல் அமைப்பினரால் 200 மாணவர்களுக்கான பெறுமதியான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கிய நிகழ்வு-24-01-2016
Reviewed by Author
on
January 24, 2016
Rating:
No comments:
Post a Comment