பெண்களை ஆண்களாக மாற்றுகிறதா பீட்சா? அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு...

போன் செய்தவுடன் வீடு தேடி வரும் பீட்சாக்கள், பெண்களை ஆண்களாக மாற்றிவிடும் என்ற அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
ஆரோக்கியமான உணவுகளை தவிர்த்து, பீட்சா, பர்கர் என துரித உணவுகளின் பின்னால் செல்பவர்கள் ஏராளம், இதனால் உடல்நலனுக்கு பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் போன் செய்த 15 நிமிடங்களில் வீடு தேடிவரும் பீட்சாவின் பின்னணியில் பாலின மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான மூலக்கூறுகள் இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதாவது பீட்சாவில் உள்ள வெண்ணைய் போன்ற வழவழப்பான பொருள், பேக்கிங் செய்யப்படும் பெட்டியின் வெளிப்புறத்தில் கசியாமல் இருப்பதாக ரசாயணப்பூச்சு பூசப்படுகிறது.
இவ்வாறு கொண்டு வரப்படும் பூட்சாக்களை சாப்பிடும் போது, பெண்களின் உடலில் அதிகளவில் Testosterone-கள் சுரக்கின்றன.
எனவே அவர்கள் மெல்ல மெல்ல ஆண்மை தன்மை உடையவர்களாக மாறிவிடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர்.
இதேவேளை அவ்வகையிலான அட்டைப்பெட்டிக்குள் பெண் நத்தைகளை அடைத்துவைத்து பரிசோதித்ததில் அந்த நத்தைகளுக்கு மெல்ல, மெல்ல ஆணுறுப்புகள் வளர்வதைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுபோன்ற அட்டை பெட்டிகளுக்கு அமெரிக்காவில் தடை விதித்துள்ளதை போன்று, மற்ற நாடுகளிலும் பின்பற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்களை ஆண்களாக மாற்றுகிறதா பீட்சா? அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு...
Reviewed by Author
on
January 12, 2016
Rating:
Reviewed by Author
on
January 12, 2016
Rating:

No comments:
Post a Comment