அண்மைய செய்திகள்

recent
-

தெற்காசிய விளையாட்டு கோலாகலமாக நிறைவு: இலங்கைக்கு 186 பதக்கங்கள்....ஒரே பார்வையில் படங்கள் இணைப்பு


12 ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு போட்­டிகள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நிறை­வ­டைந்­துள்­ளன. அத்­தோடு13ஆவது தெற்­கா­சியப் போட்­டி­களை நடத்தும் வாய்ப்பை நேபாளம் பெற்­றுக்­கொண்­டுள்­ளது.

இலங்கை, இந்­தியா, பங்­க­ளாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான் ஆகிய எட்டு நாடுகள் பங்­கேற்ற 12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டிகள் கடந்த 5ஆம் திகதி ஆரம்­ப­மாகி 12 நாட்­க­ளாக நடை­பெற்­றி­ருந்­தது.

இதில் எட்டு நாடு­க­ளையும் சேர்ந்த மொத்தம் 3500இற்கும் அதி­க­மான வீர வீராங்­க­னைகள் கலந்­து­கொண்­டனர். 23 போட்டி வகை­களைக் கொண்ட இவ்­வி­ளை­யாட்டு விழாவில் 20 போட்­டி­களில் இலங்கை கலந்­து­கொண்­ட­தோடு சாத­னை­க­ளையும் படைத்­தி­ருந்­தது.

நிறை­வு­விழா

குஹாத்தி இந்­திரா காந்தி விளை­யாட்­ட­ரங்கில் நிறைவு விழா நேற்று மாலை 5 மணிக்கு ஆரம்­ப­மா­னது. இதன் முதல் அங்­க­மாக எட்டு நாடு­க­ளையும் சேர்ந்த வீர வீராங்­க­னைகள் அதி­கா­ரிகள் உள்­ளிட்ட அனை­வரும் மைதா­னத்தைச் சுற்றி கொடி­களை அசைத்­த­படி வலம் வந்­தனர். நிறைவு விழாவில் இந்­தி­யாவின் விளை­யாட்டுத் துறை அமைச்சர் சோனோவால், அசாம் முதல்வர் தருண் கோகாய், மேகா­லய விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் ஜெனித் சங்மா, நேபாள விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் சத்ய நாரா­யணன் மண்டல் நேபாள ஒலிம்பிக் சங்­கத்­த­லைவர் ஜீவன் ராம் ஷ்ரேஷ்தா உள்­ளிட்ட பல முக்­கி­யஸ்­தர்கள் பங்­கேற்­றனர்.

அதன்­பின்னர் தெற்­கா­சிய விளை­யாட்டுத் தீபம் அணைக்­கப்­பட்­ட­தோடு 12ஆவது தெற்­கா­சியப் போட்டி­களின் ஏற்­பாட்டுக் குழுத் தலை­வ­ரான இந்­தி­யாவின் விளை­யாட்டுத் துறை அமைச்சர் சோனோ வால் 12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டிகள் நிறை­வ­டை­கின்­ற­தென உற்­சா­கத்­தோடு உத்­தி­யோக பூர்வ அறி­விப்பை விடுக்க அரங்­கத்தில் கூடி­யி­ருந்­த­வர்கள் தமது மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­தினர். அத­னைத்­தொ­டர்ந்து வானைப் பிளக்கும் கண்­கவர் வாண வேடிக்­கைகள் நிகழ்த்­தப்­பட்­டன.

தெற்­கா­சிய ஒலிம்பிக் கொடி இறக்­கப்­பட்டு, தெற்­கா­சிய ஒலிம்பிக் சபைத் தலைவர் என்.ராமச்­சந்­தி­ர­னிடம் இந்­திய விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் சோனாவல் ஒப்­ப­டைத்தார். அடுத்து 13ஆவது விளை­யாட்டு விழாவை தலை­மை­யேற்­று நடத்தும் நடத்தும் நேபாள ஒலிம்பிக் சங்­கத்­த­லைவர் ஜீவன் ராம் ஷ்ரேஷ்­தா­விடம் கொடியை உத்­தி­யோக பூர்­வ­மாக கைய­ளித்தார்.

அதன்­பின்னர் நேபா­ளத்தின் தேசிய கீதம் இசைக்­கப்­பட்­டது. அத­னைத்­தொ­டர்ந்து நேபா­ளத்தின் கலா­சார நிகழ்­வுகள் அரங்­கேற்­றப்­பட்­டன. அத்­தோடு குஹாத்தி மற்றும் சிலோங் மாநி­லங்­களின் கலா­சார நட­னங்கள் அரங்­கேற்­றப்­பட்­டன. அத­னை­ய­டுத்து உத்­தி­யோக பூர்­வ­மாக 12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்­டுப்­போட்­டிகள் நிறைவடைந்தன.

குத்­துச்­சண்டை

12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டி­களின் இறுதி நாளான நேற்று பெரிதும் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­திய பெண்­க­ளுக்­கான குத்­துச்­சண்டைப் போட்­டியின் இலங்கை வீராங்­கனை அனுஷா கொடித்­து­வக்கு வெள்ளிப்­ப­தக்­கத்தை தன­தாக்­கினார்.

பெண்­க­ளுக்­கான குத்­துச்­சண்டை இறு­திப்­போட்டி பெரும் எதிர்­பார்ப்­புக்கு மத்­தியில் நேற்று நடை­பெற்­றது. ஐந்து முறை சம்­பியன் பட்டம் வென்ற இந்­தி­யாவின் மேரிகோம் மற்றும் இலங்­கையின் முன்­னணி குத்­துச்­சண்டை வீராங்­க­னை­யான அனுஷா கொடி­த்து­வக்கு ஆகியோர் 51 கிலோ கிராம் பிரிவில் மோதி­க­் கொண்­டனர்.

ஆயி­ரக்­க­ணக்­கான இர­சி­கர்­களின் பிர­சன்­னத்­துடன் பலத்த ஆர­வா­ரத்­திற்கு மத்­தியில் ஆரம்­ப­மான இந்தப் போட்­டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்­திய இந்­திய வீராங்­கனை மேரி கோம், நொக் அவுட் முறையில் வென்றார். 90 விநா­டிகள் நடந்த போட்­டியில் தனது முழு­மை­யான ஆதிக்­கத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார் மேரிகோம். அவரின் ஆவே­ச­மான தாக்­கு­தலை எதிர்­கொண்ட இலங்­கையின் அனுஷா கொடித்­து­வக்கு இரண்டு முறை நிலை­த­டு­மாறி கீழே விழுந்தார்.

அதன் பின்னர் சிறிது நேரம் மருத்­துவ உதவிப் பெற்று மீண்டும் வந்து விளை­யா­டினார். அதன்­பி­றகு தன்­னம்­பிக்­கையை சற்றும் தள­ர­வி­டாது மோதிய அனுஷா இறு­தியில் நொக் அவுட் முறையில் தோல்­வி­ய­டைந்தார். இதனால் அவ­ருக்கு வெள்ளிப்­ப­தக்­கமே கிடைத்­தி­ருந்­தது. அத்­துடன் குத்­துச்­சண்­டைப்­பி­ரிவில் அனைத்து பதக்­கங்­க­ளையும் இந்­தியா தன்­வ­சப்­ப­டுத்­தி­ய­மையும் விசேட அம்­ச­மாகும்.

துப்­பாக்­கி ­சுடுதல்

25மீற்றர் ஆண்­க­ளுக்­கான துப்­பாக்­கிச்­சுடுதல் போட்­டியில் இந்­தியா தங்கம் மற்றும் வெள்ளிப்­ப­தக்­கங்களை தன­தாக்­கி­ய­தோடு பாகிஸ்தான் வீரர் வெண்­க­லப்­ப­தக்­கத்தை வெற்றி கொண்டார்.

பெண்­க­ளுக்­கான 10மீற்றர் துப்­பாக்­கிச்­சுடுதல் போட்­டியில் தங்கம், வெள்ளி, வெண்­கலம் ஆகிய மூன்று பதக்­கங்­க­ளையும் இந்­தி­யாவே சுவீ­க­ரித்­த­தோடு இப்­பி­ரி­விலும் இந்­தியா தனது ஆதிக்­கத்­தை நிலை­நி­றுத்­தி­யி­ருந்­தது.

தட­க­ளத்தில் சாத­னைகள்

இவ்­வி­ளை­யாட்டு விழாவின் போது தட­க­ளப்­போட்­டி­களில் பன்­னி­ரண்டு தெற்­கா­சிய சாத­னைகள் நிலை­நாட்­டப்­பட்­டுள்­ளன. இலங்­கை­வீ­ரர்­க­ளான கிஷான் இஷான் 100மீற்றர் ஓட்­டத்­திலும், தடி­யூன்­றிப்­பாய்­தலில் சந்­த­ரு­வானும் சாத­னை­களை படைத்­தனர். அதே­வேளை ஏனைய பத்து சாத­னை­க­ளையும் இந்­திய வீரர்­களே நிலை­நாட்­டி­யுள்­ளனர். குறிப்­பாக 5000மீற்றர் 10ஆயிரம் மீற்றர், நீளம் பாய்தல், ஈட்டி எறிதல் ஆகிய போட்­டி­களில் ஆண்கள், பெண்கள் பிரி­விலும், குண்­டு­வீசுதலில் பெண் கள் பிரி­விலும் முப்­பாய்ச்­சலில் ஆண்­கள் பி­ரி­விலும் இந்­திய வீரர்கள் சாத­னை­களை நிலை­நாட்­டி­யுள்ளனர்.

நீச்சலில் சாதனை

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஜூலியன் போலிங் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமையே இதுவரையில் சாதனையாகவிருந்தது. இந்த சாதனையை இலங்கையின் நீச்சல் வீரர் மெத்யூ அபேசிங்க ஏழு தங்கப் பதக்கங்களை வென்று முறியடித்துள்ளார்.

இலங்கைக்கு இரண்டாமிடம்

இலங்கை அணி 25 தங்கம், 63 வெள்ளி, 98 வெண்கலம் உள்ளடங்கலாக 186 பதக்கங்களைப் பெற்று இரண்டாவது இடத்தினை தனதாக்கியிருந்தது. முதலிடத்தில் இந்தியா 188 தங்கம், 90 வெள்ளி 30 வெண்கலம் உள்ளடங்கலாக மொத்தம் 308 பதக்கங்களைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.














தெற்காசிய விளையாட்டு கோலாகலமாக நிறைவு: இலங்கைக்கு 186 பதக்கங்கள்....ஒரே பார்வையில் படங்கள் இணைப்பு Reviewed by Author on February 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.