அண்மைய செய்திகள்

recent
-

பஸ்ஸின் முன் சில்லில் சிக்கி சிறுவன் பலி


கொழும்பிலிருந்து டயகம நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் முன் சில்லில் சிக்கி, 14 வயது சிறுவன் ஒருவர் நேற்று(17) மாலை உயிரிழந்துள்ளார். இச்சம்பத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை ஹட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அக்கரப்பத்தனை, வெவர்லி தோட்டத்தைச் சேர்ந்த சிவலிங்கம் சுகேந்திரன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 கொழும்பிலிருந்து டயகம நோக்கி செல்லும் மேற்படி பஸ்ஸானது, ஹட்டன் பஸ் தரிப்பிடத்துக்கு சென்றுவிட்டே டயகம நோக்கி பயணிக்கும். இப்பஸ்ஸானது நேற்றும் குறித்த நேர அட்டவணைக்கு ஏற்பட்ட பஸ் தரிப்பிடத்தை அடைந்துள்ளது. 

இந்நிலையில், பஸ்ஸில் பயணித்த மேற்படி இளைஞன், பஸ்ஸை நிறுத்துவதற்கு முன்னரே இறங்க முற்பட்டபோது, பஸ்ஸின் சில்லில் சிக்குண்டுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். சடலம் கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தினர்.
பஸ்ஸின் முன் சில்லில் சிக்கி சிறுவன் பலி Reviewed by NEWMANNAR on February 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.